districts

சுழற்சி முறையில் பொருள் விநியோகமா? தலை சுற்றுவதாக ரேசன் விற்பனையாளர்கள் வேதனை

திருப்பூர், பிப். 7 - திருப்பூரில் வறுமை கோட்டுக்கு கீழ்  இருக்கும் குடும்பத்தினருக்கு வழங் கும் ரேஷன் பொருட்களை குடும்பத் தில் அனைவரும் சுழற்சி முறையில்  வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்  என அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதனால் தேவையற்ற வீண் சச்சரவு களை சந்திப்பதாக ரேஷன் கடை விற்ப னையாளர்கள் வேதனையுடன் கூறு கின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும்  குடும்பத்தினருக்கு “பி எச் எச்”  (முன்னு ரிமை குடும்பத்தாரர்கள்) என்ற பெயரில்  குடும்ப அட்டை  வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏ ஏ ஒய் என அந்தியோ தயா அன்ன யோஜனா திட்டத்திலும் நலிந்த பிரிவினருக்கு அரிசி வழங்கப்ப டுகிறது. இதுவரை பி எச் எச், ஏ ஏ ஒய் கார்டு களைக் கொண்டு வரும் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு ரேஷன் பொருட் களை விற்பனையாளர்கள் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மேற்கண்ட  குடும்பத்தினர் ஒவ்வொரு மாதமும் ஒவ் வொருவர் என்றபடி சுழற்சி முறையில்  வேறு நபர்கள் வர வேண்டும், அப்படி  சுழற்சி முறையில் வருபவருக்குத்தான் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்  என குடிமைப் பொருள் நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் பிஎச்எச், ஏ ஏ ஒய்  கார்டுதாரர்கள் கடந்த மாதம் ரேஷன்  கடைக்கு குடும்பத் தலைவர் வந்திருந் தால், இந்த மாதம் குடும்பத் தலைவி  வர வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளனர்.

இதுபோல் ஒவ்வொரு கார்டு தாரர்களிடமும் ஏற்கனவே வந்தவர்கள் வரக்கூடாது, குடும்பத்தில் வேறு நபர்  வரவேண்டும் என்று கூறி கடை விற் பனையாளர்கள் திருப்பி அனுப்பியுள் ளனர். இதற்கு கார்டுதாரர்கள் கடும் ஆட் சேபம் தெரிவித்துள்ளனர்.  விற்பனை யாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், சச்சரவு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கடை விற்பனையா ளர்களிடம் கேட்டபோது, “எங்கள் வீட் டில் கூலி வேலைக்குச் சென்று கொண்டி ருக்கின்றனர். அவர்கள் வருவதென் றால் சம்பளத்தை இழந்து விட்டு வர  வேண்டும். அந்த சம்பளத்தை நீங்கள்  தருகிறீர்களா? என்று விற்பனையாள ரிடம் கோபமுடன் கேட்கின்றனர். “அரசு  உத்தரவை நாங்கள் அமல்படுத்துகி றோம், நாங்கள் வேறு என்ன செய்ய  முடியும்? என்று கேட்டாலும் எப்படியா வது பொருள் வழங்க வேண்டும் என்று  பிடிவாதமாக நின்று கொண்டு வாக்கு வாதம் செய்கின்றனர். ஒருபுறம் மாவட்ட நிர்வாகம், இந்த இரண்டு திட்டங்களின் மூலம் பயன் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்யப்பட வேண் டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும்  சுமார் 50 குடும்ப அட்டைகள் மின்னணு  முறையில் பதிவு செய்ய வேண்டும். பிப் ரவரி மாத இறுதிக்குள் இந்தப் பணியை  முடிக்க வேண்டும் என்று தகவல் அனுப் பியுள்ளனர். மறுபுறம் குடும்ப அட்டை தாரர்கள் ஒத்துழைக்காமல் சச்சரவில் ஈடுபடுகின்றனர். எனவே இருபுறமும் இடி வாங்கும் மத்தளம் போல எங்கள் நிலைமை உள்ளது என்று ரேஷன் பணியாளர்கள் வேதனையுடன் கூறு கின்றனர்.

அதேசமயம் வறுமை நிலை யில் உள்ள சாமானிய மக்களின் கேள்வி யும் நியாயமானதாக தான் உள்ளது. அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று  பிழைத்து வரும் அந்த குடும்பத்தாரில் யாரேனும் ஒருவர் வருமானத்தை இழந்து விட்டு வந்து ரேஷன் கடை யில் பொருள் வாங்க வேண்டும் என்பது  அவர்களுக்கு இழப்பு ஏற்படுத்தும்.எனவே அரசு நிர்வாகம் இப் பிரச்ச னையில் தேவையற்ற விதிமுறைகளை  நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது.  ஒன்றிய அரசு பட்ஜெட்டில் உணவு  மானியத்தை வெட்டிச் சுருக்கி இருக்கி றது. அதன் தொடர்ச்சியாக ஏ ஏ ஒய், பி எச்  எச் திட்டத்தில் பயன்பெறும் பயனா ளிகள் எண்ணிக்கையையும் வெகுவாக குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இந்தப் பின்னணியில் தான் சிக்கலான  நடைமுறைகளை கட்டாயப்படுத்துவ தன் மூலம் அந்த பயனாளிகளே சோர்வ டைந்து விலகிச் சென்று விடுவார்கள் என்பதாக ஒன்றிய அரசு நிர்வாகத்தின் மனோநிலை உள்ளது. எனினும் உண்மையான பயனாளி கள் உரிய சலுகைகளை பெறுவதில் இருந்து விலக்கி விடக்கூடாது என்பதில்  மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் கவ னமுடன் இருக்க வேண்டும். ஏழைகள் இழப்பை சந்திக்க அனுமதிக்க கூடாது  என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்த னர்.