திருப்பூர், மே 12- பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் மாதாந்திர குறைகேட்பு முகாம் நடத்தப் பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் ஏற் பட்ட ஊரடங்கின் காரணமாக இந்த குறை கேட்பு முகாம் நடத்தப்படாமல் இருந்து வந் தது. ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், திருத் தம், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண் டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மாதந்தோறும் ரேஷன் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி கள் கூறுகையில், கொரோனா பாதிப்பு இல் லாததால் ஒவ்வோரு மாதமும் 2வது சனிக்கி ழமை தாலுகா அளவிலான குறைகேட்பு முகாம் நடத்தப்படும். குடிமைப்பொருள் தனி தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், குறைகேட்பு முகாம் நடத்த வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டுள்ளது என்றனர்.