திருப்பூர், டிச. 16 - பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சிக்குட்பட்ட இராமம்பாளை யம் கிராமத்தில் அருந்ததியர் குடியி ருப்பு பகுதியில் ஆண்டுக்கணக்கில் தேங்கியிருக்கும் கழிவுநீர் குட் டையை அகற்றி சுத்தம் செய்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழிவுநீர் குட்டை போல் தேங்கியி ருப்பதால் அருகில் உள்ள வீட்டுச் சுவர் கள் பாதிக்கப்பட்டு இடிந்து விழும் ஆபத் தான நிலையில் உள்ளது. இது தொடர் பாக கடந்த மூன்று ஆண்டு காலமாக தொடர்ந்து விண்ணப்பித்தும் அந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வில்லை என்று அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கம் குற்றஞ்சாட்டி யுள்ளது. மேலும், இப்பகுதிக்கு அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளதால் பள்ளி மாணவர்கள் பாதிக் கப்படும் நிலை உள்ளது. எனவே குடியி ருப்பு மற்றும் பள்ளி வளாகத்தை சுகா தாரமான, பாதுகாப்பான பகுதியாக மாற்றித் தர விவசாயத் தொழிலாளர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. அத்துடன் இப்பகுதி மக்களுக்கு அத்திக்கடவு குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும், பாதை வசதி,
தெரு விளக்கு வசதி மற்றும் பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி பொங் கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி. சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எ.பஞ்சலிங்கம், மாவட்ட தலைவர் சண்முகம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி எஸ்.சிவசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.பாலன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினர். இதில் இராமம்பாளையம் பகுதி அருந்ததியர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பொங்கலூர் ஊராட்சி ஒன் றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.