தருமபுரி, ஜன.11– தருமபுரி ராமக்காள் ஏரி திறந்தவெளி மதுக்கூடமாக மாறி வருவதை போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி நகரையொட்டி, 100 ஏக்கர் பரப்ப ளவில் ராமக்காள் ஏரி உள்ளது. தருமபுரி நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை நீரும் பெரும்பாலும் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ராமக்காள் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்து வருகி றது. நகரை ஒட்டியுள்ள இந்த ஏரியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடை பாதை அமைக்கப்பட்டது. மேலும், மரக்கன் றுகள் நடவு செய்யப்பட்டன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின் றனர். மேலும், பகல் நேரங்கள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருபவர்கள், ராமக்காள் ஏரியில் அமர்ந்து படித்து வரு கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் பயன்பாட் டில் முக்கியத்துவம் வாய்ந்த ராமக்காள் ஏரி அருகே உள்ள மதுமானக் கடையில் இருந்து மது வாங்கும் பலர், ஏரிக்கரை மற்றும் ஏரி யில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மேடை யில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்களை உடைத்து செல்வது, டம்ளர், திண்பண்ட காலி பாக்கெட் டுகள், தண்ணீர் பாட்டில்கள் கேரிபேக்கு களை வீசி செல்கின்றனர். இதனால், நடைபயிற்சி மேற்கொள்ப வர்கள், போட்டி தேர்வுகளுக்கு படிக்க வரும் மாணவர்கள் கால்களில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தருமபுரி நகரை யொட்டி, தருமபுரி – கிருஷ்ணகிரி சாலை யில் உள்ள ராமக்காள் ஏரி, தற்போது திறந்த வெளி மதுக்கூடமாக மாறியுள்ளது. இவ்வழி யாக ரோந்து செல்லும், தருமபுரி நகர காவல் துறையினர், ஏரிக்கரையில் மதுபானம் குடிப் பவர்களை, விரட்ட நடவடிக்கை எடுக்கா மல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.