திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை
திருப்பூர், ஏப். 22 - இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் திருநாள் சனியன்று திருப்பூரில் உற்சாகமாக கொண்டாடப் பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூர் நகரிலும், மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்பு கூட்டுத் தொழுகை யில் ஈடுபட்டனர். திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பு கூட்டுத்தொ ழுகை நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தை கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பட்டா வழங்க கோரி ஆட்சியரகத்தில் மனு
திருப்பூர், ஏப்.22 - திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொது மக்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமையில் மனு அளிக்கப்பட் டது. திருப்பூர் மாநகராட்சி 37ஆவது வார்டு சிக்கண்ணா கல் லூரி சாலை ரயில்வே லைன் பகுதியில் 112 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வசித்து வரும் பகுதிக்கு இதுவரை வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் திடீரென வருவாய்த்துறையினர் வண்டி பாதை புறம்போக்கு நிலம் என் பதால் காலி செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இத னால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 30 ஆண்டுக ளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு அந்த இடத்தி லேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கோரிக்கை மனு அளித்தனர். இவர்களுடன் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் எம்.ரவி, மாநகர மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான எஸ்.ரவிச் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
12 மணி நேர வேலை சட்டம்: பாரதிய மஸ்தூர் சங்கம் கபட நாடகம்
திருப்பூர், ஏப். 22 - தமிழ்நாடு அரசின் தொழி லாளர்களின் வேலை நேரத்தை மாற்றிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக பாரதிய மஸ்தூர் சங்கம் கூறியுள்ளது. தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாத இந்த சங்கம், இத னால் குடும்ப அமைப்பு சீர்குலையும் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் நிறை வேற்றப்பட்டிருக்கும் இந்த சட்டத்தை அங்கு நிறைவேற்றவில்லை என்று மூடிமறைத்து வக்காலத்து வாங்கி பச்சைப் பொய்யை அந்த சங்கத்தின் நிர்வாகி கூறியிருக்கிறார். பிஎம்எஸ் தென் பாரத அமைப்புச் செயலாளர் துரைராஜ் என்பவர் திருப் பூரில் இது குறித்து பேட்டியளித்தார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா கடும் கண்டனத்திற்குரியது எனவும், பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத ஒரு சட்ட திருத்த மசோதாவை திமுக அரசு தமிழ்நாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் ஒன்றிய பாரதிய ஜனதா அரசு, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தில்லியில் வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத் திற்கும் வழியில்லாமல் அவசரகதி யில் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை நிறைவேற்றியது, அத்துடன் பாஜக ஆளும் குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12 மணி நேரம் வேலைச் சட்டம் அமலாக்கப்பட்டு உள்ளது. அதை அப்படியே மறைத் துவிட்டு பச்சைப் பொய்யை துரை ராஜ் சொல்லியிருக்கிறார். தமிழக அரசு இந்த சட்ட திருத்த மசோ தாவை திரும்ப பெற வேண்டும் என்று கூறியவர், ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறிக் கொண்டார்.
இலவச பயிற்சி வகுப்புகள்
ஈரோடு, ஏப்.22- தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தால் நடத்தப்படும் TNUSRB- SI எழுத்து தேர்விற்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 26 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் 26ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவும். மேலும் விபரங்களுக்கு, vgerode@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 0424-2275860, 9578887714. என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ் வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண் டுள்ளார்.
சூறாவளிக் காற்றுடன் கனமழை: வாழை மரங்கள் சேதம்
அன்னூர், ஏப்.22- அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. இத னால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் பகுதி யில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலை யில், அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளியன்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அன்னூர், பொகலூர், கைகாட்டி, ஆணைப்பள்ளி புதூர், தாளத்துறை, கஞ்சநாயக்கன் பாளையம், சேம்சம்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள் ளனர். மேலும், சூறாவளி காற்று மற்றும் பலத்த மழைக்கு சாலையோரங்களில் இருந்த 15க்கும் மேற்பட்ட மரங்களும் முறிந்து விழுந்தன. பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள், மின் வயர்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகினர். இந்நிலையில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந் ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
தாகம் தணிக்க அணைக்கு படையெடுக்கும் யானைக்கூட்டம்
உடுமலை, ஏப்.22- வெயிலின் உக்கிரத்தால் யானைகள் தண்ணீரியை தேடி படையெடுத்து வருகின்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகில் உள்ளது திரு மூர்த்தி அணை. தற்போது, வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வழக்கமாக அமராவதி அணைக்கு தான் யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்த வரும். கடந்த ஒரு வாரமாக ஜல்லிப்பட்டி - கொங்கரா குட்டை பகுதிகளில் உள்ள மாந்தோப்பு, தென்னந்தோப்பு உள்ளிட்ட விலை நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம் பகல் வேளைகளில் தோட்டங்களுக்குள் மா, தென்னை உள்ளிட்ட வற்றைத் தின்று ஓய்வு எடுத்து வருவதுடன் மாலை வேலை களில் திருமூர்த்தி அணைக்கு வந்து தாகம் தணிக்கின்றன. இதில், குட்டிகளுடன் 10 முதல் 12 யானைகள் வரை கூட்ட மாக அணையில் இறங்கி தண்ணீர் குடிக்கின்றன. இந்நிலை யில், திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் புகைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்.
470 கிலோ ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது
திருப்பூர், ஏப்.22- திருப்பூரில் 470 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோ தமாக பதுக்கி வைத்திருந்த நபரை குடிமைபொருள் அதிகாரிகள் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் திருப் பூர் டிஎன்கே புரம் அருகில் ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம் பந்தமாக சந்தேகத்தின் அடிப் படையில் சோதனை செய்த னர். இதில் அந்த வழியாக வந்த டிஎன்39 சிஎப் 3523 இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ரேசன் அரிசி 470 கிலோ வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. இந்த அரிசி கொண்டு வந்த நபரை பற்றி விசாரணை செய்ததில் கார்த்திக் (32) திரு நீலகண்டபுரம் என தெரிய வந்தது. பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி கள்ள சந்தையில் வட மாநிலத்தவர் களுக்கு விற்பனை செய்வ தற்காக 470 கிலோ ரேசன் அரி சியை கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். எனவே அவரை ரேசன் அரிசி கடத் திய குற்றத்திற்கு கைது செய் தும், மேற்படி நபரிடமிருந்த ரேசன் அரிசி 470 கிலோவை கைப்பற்றியும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை கைப்பற்றியும் திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலம் டெண்டர் சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள்
சென்னை, ஏப்.22- கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர் கள் டெண்டரை சமர்ப்பித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சிஏஜி) தலைவரின் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்துள்ள தாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஒப்பந்ததாரர்களால் ஏலம் சமர்ப் பிக்கப்பட்ட கணினியின் அடையாள முகவரியையும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியையும் தரவுத் தளம் கைப்பற்றியது. ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முக வரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகையில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களை சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினி களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் வரை 214 ஒப்பந்தப் புள்ளி அறிவிப்புகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, 87 ஒப்பந்த தாரர்கள் துறை அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 289 ஏல ஒப்பந்தங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 71 ஏலங் கள் எல் 1 ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக வழங்கப்பட் டன. ஏலதாரர்கள், துறை சார் கணினிகளின் வாயிலாக ஏலங் களை சமர்ப்பித்தன் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும், அதிகபட்ச போட்டி ஏலத்தை பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை. மே 2022 இறுதி கலந்தாய்வின் போது முதன்மைச் செயலா ளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். அரசு இதை ஏற்றுக்கொண்டு ஆகஸ்ட் 2022இல் இதுபோன்ற தவறு களை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிக ழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவு றுத்தல் வழங்கப்பட்டதாக கூறியது” என்று அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
அன்னூர், ஏப்.22- அன்னூர் காவல் நிலைய பகுதியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல் லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந் நிலையில், வெள்ளியன்று அன்னூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப் படையில், கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வா ளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கரியம்பாளை யம், பொன்னகவுண்டன் புதூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்ப னைக்கு வைத்திருந்த அக்சயா தாஸ் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 3 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடு பட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட் டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைக்க வேண்டும். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81212 மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 77081 00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தக வல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.'
முட்டை விலை உயர்வு
நாமக்கல், ஏப்.22- முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 430 காசு களாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே முட்டைக் கோழி கிலோ ரூ.77க்கும், கறிக்கோழி கிலோ ரூ.106க்கும் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற் றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
காட்டுயானை தாக்கியதில் முதியவர் பலி
தருமபுரி, ஏப்.22- மாரண்டஅள்ளி அருகே வட்டகானம் பட்டியில் காட்டு யானைகள் தாக்கி முதிய வர் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக் களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள வட்டகானம்பட்டி ஏரி கொட்டாய், இரு ளர் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் (71). கூலித்தொழிலாளியான இவர், வெள்ளி யன்று காலை வேலைக்கு செல்வதற்காக வட்டகானம்பட்டியில் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த 2 காட்டு யானைகள் காளியப்பன் முன் வந்து நின் றன. இதை சற்றும் எதிர்பாராத காளியப்பன் யானைகளிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் 2 யானைகளும் சேர்ந்து காளியப் பனை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட் டன. இதில் பலத்த காயமடைந்த காளியப் பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழியாக சென்ற கிராம மக்கள், காளியப் பன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாரண்ட அள்ளி போலீசார் மற்றும் வனத்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம் பவ இடத்துக்கு சென்ற போலீசார் காளியப் பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்ப வம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஏப்.22- தருமபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட் டங்களில் இருந்து விவசாயி கள் பட்டுக்கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வரு கின்றனர். இந்த அங்காடிக்கு வெள்ளியன்று 1,622 கிலோ வாக பட்டுக்கூடு அதிகரித் தது. இதில், ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.577க்கும், குறைந்தபட்ச மாக ரூ.413க்கும், சராசரி யாக ரூ.531.17க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 61 ஆயிரத்து 69க்கு ஏலம் போனது. இதில், ஏரா ளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.