districts

img

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஜூலை 20ல் பேரணி-ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 14- ஒன்றிய அரசு நிறைவேற்ற உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து சமூக நல்லிணக்க மேடை  சார்பில் கண்டனப் பேரணி மற்றும்  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள தாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தருமபுரி சமூகசேவை மைய அலு வலகத்தில் வியாழனன்று  நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, மக்கள்  ஒற்றுமை மேடை பொறுப்பாளர் இரா.சிசுபாலன் தலைமை தாங் கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்  அ. குமார்,  மனிதநேய மக்கள் கட்சியின்  மாநில பிரச்சார செயலாளர் சாதிக்  பாஷா, மாவட்ட நிர்வாகி நசீர்,  அருட்தந்தைகள் சூசைராஜ், மாரி, சிஎஸ்ஐ செயலாளர் டியூக் பொன்ராஜ்,  ஜனநாயக மாதர் சங் கத்தின் மூத்த தலைவர் எஸ்.கிரை சாமேரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செய லாளர் ம.சிங்காரவேல், நிர்வாகி கள் வெ.ராஜன், என்.கந்தசாமி, கே.  பூபதி, எம். மீனாட்சி ஆகியோர் பங் கேற்று பேசினர்.

கூட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப் பூரில் மெய்தி இன மக்களுக்கும்,  குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான தேவாலயங்கள்  இடித்து தரைமட்டமாக்கப்பட் டுள்ளன. லட்சக்கணக்கானோர் வீட்டை இழந்து அகதிகளாக்கப் பட்டுள்ளனர். மனித நேயம் மரித்துப் போன சம்பவங்கள் நடை பெறுகின்றன. கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனைக் கண்டித்தும், பொது  சிவில் சட்டம் என்ற பெயரில் இஸ் லாமிய,  கிறிஸ்தவ மதச் சிறுபான் மையினரின் தனிநபர் உரிமையில் மட்டுமல்லாமல், இந்துக்களின் தனி நபர் உரிமையிலும் தலையீடு  செய்கின்ற, நாட்டின் பன்மைத் துவத்துக்கு ஊறுவிளைவிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை எதிர்த்து வருகிற ஜூலை 20ஆம்  தேதியன்று பிற்பகல் 3 மணிய ளவில் தருமபுரியில் கண்டன பேரணி-  ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக,  காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம்  லீக், திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்க உள் ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் திர ளாக பங்கேற்க அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.