கோவை, மார்ச் 23 – மாவீரன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளையொட்டி பல்வேறு பகுதியில் மக்கள் ஒற்று மையை பாதுகாப்போம், மதவெ றியை விரட்டியடிப்போம் என்கிற உறுதிமொழியேற்பு மற்றும் சிறப்பு கருத்தரங்கள் நடைபெற்றது. சுதந்திர போராட்ட மாவீரன் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோ ரின் நினைவு நாளையொட்டி, கோவையில், தமிழ்நாடு பொது மேடை 2024 அமைப்பின் சார்பில் மோடி ஆட்சி தொடலாமா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற் றது. கோவை ரயில் நிலையம் எதி ரில் உள்ள அண்ணாமலை அரங் கில் நடைபெற்ற கருத்தரங்கில் முன் னாள் நீதியரசரும் தமிழ்நாடு பொது மேடை 2024 அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அரி பரந்தாமன் பங்கேற்று கருத்துரை யாற்றினார். இதில், தந்தை பெரி யார் திராவிடர் கழக பொதுச் செய லாளர் கு.ராமகிருஷ்ணன், சுய ஆட்சி இந்தியா தேசிய தலைவர் கிருஸ்டினா சாமி, தமிழ்நாடு பொது மேடை துணை ஒருங்கிணைப்பா ளர் செந்தில், தமிழ்நாடு பொது மேடை மாநில ஒருங்கிணைப்பு குழு கண.குறிஞ்சி மற்றும் வழக்கறிஞர் முருகேசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவுதி னத்தை முன்னிட்டு, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சார்பில், தருமபுரி முத்து நினைவு அறக்கட் டளை அலுவலகத்தில் கருத்தரங் கம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சபரிராஜன் தலைமை வகித்தார். இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் ஸ்நேகா முன்னிலை வகித்தார். வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலா ளர் எம்.முத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள்கு மார், மாவட்டப் பொருளாளர் சிலம் பரசன், நிர்வாகிகள் குறளரசன், மீரா, இந்திய மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் குப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வார்டு பாலர் பூங்கா சார்பில் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் அஞ்சலி கூட்டம் ஆர்.அச்சு தன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாலர் பூங்கா கிளைச் செய லாளர் எம்.ஸ்டீபன், உதவி செயலா ளர்கள் எம்.யாகவி, பிரேம்குமார் என்கின்ற சூர்யா, உதவி தலைவர் கே.சாய் மற்றும் வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் பி. ராஜா, சிபிஎம் செயலாளர் சி.வீர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.