வெளிநாட்டு வர்த்தக வாரியத்தில் ராஜா சண்முகம் நியமனம்
திருப்பூர், ஜூலை 13 – ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக வாரியத்தில் திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் அலுவல் சாரா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு கடந்த 8ஆம் தேதி பிறப்பித்தது. ஒன்றிய வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச் சர் பியூஸ் கோயல் தலைமையில் செயல்படும் இந்த வெளி நாட்டு வர்த்தக வாரியம் நாட்டின் அந்நிய வர்த்தகத்தை மேம்ப டுத்துவதற்கான ஆலோசனைகளை ஒன்றிய அரசுக்கு வழங் கும். இதில் மாநில மற்றும் பிராந்தியம் சார்ந்த வர்த்தக் கொள்கை மற்றும் மாவட்ட ஏற்றுமதி மையத்தில் தேவையான பயிலரங்கம் மற்றும் அடையாளப்படுத்தும் உற்பத்தி பொருட் களை மேம்படுத்தவும் வெளிநாட்டு வர்த்தக வாரியத்தில் இட மளிக்கும் வகையில் அலுவல் சாரா உறுப்பினர் நியமிக்கப்பட் டிருப்பதாகவும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செலவில் பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் திட்டம் அக்னிபத்
திருப்பூர், ஜூலை 13 – ஒன்றிய அரசின் செலவில் பயிற்சி கொடுத்து பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் திட்டமாகவே அக்னிபத் இருக்கிறது என்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் துணைத் தலைவர் கதிரவன் கூறினார். திருப்பூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது கதிரவன் கூறியதாவது: அக்னிபத் திட்டம் மத்திய அரசின் செலவில் பயிற்சி கொடுத்து பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் திட்டமாகவே இருக்கிறது. நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்கள் பெரும ளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணத்தை கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஜனநாய கத்தை சீர்குலைக்கும் பாஜக விரைவில் வீழ்ச்சியை சந்திக் கும் என்று கூறினார்.
விவசாயிகள் சங்க காங்கேயம் தாலுகா மாநாடு
திருப்பூர், ஜூலை 13 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காங்கயம் தாலுகா மாநாடு செவ்வாயன்று கீரனூரில் சேகர் தலைமையில் நடை பெற்றது. எஸ்.தங்கவேல் வரவேற்றார். ஏ.தேவராஜ், என்.கே. குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி துவக்கி வைத்தார். தாலுகா செய லாளர் பொ.வேலுசாமி அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு நிர் வாகி கே.திருவேங்கடசாமி வாழ்த்திப் பேசினார். செம்மங்குழிபாளையத்தில் கல்குவாரியில் விவசாய நிலங்களில் கல் விழுவதும், குடியிருப்புகளில் மாசு கலந்த காற்று வீசுவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதால் கல்குவா ரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். பெட்ரோல் பைப் லைன் திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரம் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும். உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கால தாமதம் இல்லாமல் ஒரே தவணையில் முழு தொகையையும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், விவசாயிகள் சங்க தாலுகா தலைவராக ஏ.தேவ ராஜ், செயலாளராக வி.தங்கவேல், பொருளாளராக சேகர், துணைத் தலைவர்களாக என்.கே.குப்புசாமி, ஆர்.பி.நடராஜ், துணைச் செயலாளர்களாக எஸ்.தங்கவேல், கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட நகைகளுக்கு இழப்பீடு கோரி கேத்தனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 13 - திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கேத்தனுரில் தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல் பட்டு வருகிறது. இங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற் றிய சேகர் என்பவர், வங்கியில் அடகு வைத்த 700 க்கும் மேற்பட்டோரின் நகைகளில் சிறிது, சிறிதாக நூதன முறை யில் திருடினார். இது தொடர்பான புகாரில் காமநாயக்கன்பா ளையம் போலீசார் சேகரை கைது செய்தனர். இந்நிலை யில் நகைகளை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங் களது நகைக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க கோரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு புதன்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே வங்கி தரப்பில் ஒரு மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. கால அவகாசம் முடிந்தும் இழப்பீடு கிடைக்காததால் விவசாயிகள், வாடிக் கையாளர்கள் புதனன்று வங்கியை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட் சியர் ஸ்டேட் வங்கி மண்டல அலுவலர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். வங்கி நகை மோசடி குறித்து விசா ரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ஆம் தேதிக் குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராடி யவர்கள் கலைந்து சென்றனர்.
கைப்பை பறித்த இரு பெண்கள் கைது
அவிநாசி, ஜூலை 13- திருப்பூர், பூலுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி(49). இவர், திங் கள்கிழமை திருப்பூர் பாண் டியன் நகரில் இருந்து பெரு மாநல்லூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறிச் சென்றுள் ளார். பெருமாநல்லூர் வந்து இறங்கிய போது கைப்பை யைக் காணவில்லை. அதில் கைப்பேசியும் ரூ.750 பண மும் இருந்துள்ளது. இது குறித்து பெருமாநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டதில் கணக்கம்பா ளையம் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் ஏறி மீனாட்சி யின் இருக்கைக்குப் பின் னால் அமர்ந்து வந்த, சேலம் காரியப்பட்டி பகுதியைச் சேர்ந்த காமாட்சி(40) மற் றும் காளி(29) என்ற இரு பெண்களை காவல்துறை யினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பொறியியல் பணிகள் காரணமாக கோவை - சேலம் ரயில் சேவை பாதிப்பு
கோவை, ஜூலை 13- பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், கோவை - சேலம் ரயில் சேவை ஜூலை 24 ஆம் தேதி வரை பகுதி யாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரோடு, சேலம் இடையே உள்ள காவிரி - ஆனங்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவை - சேலம், சேலம் - கோவை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை - சேலம் சிறப்பு ரயில் (எண்: 06802), ஈரோடு - சேலம் இடையே புதனன்று முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை பகுதி யாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கோவை - ஈரோடு இடையே மட்டுமே இயக்கப்படும். இதேபோல, சேலம் - கோவை சிறப்பு ரயில் (எண்: 06803) சேலம் - ஈரோடு இடையே புதனன்று முதல் 24 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து இதேபோன்று வடகோவை - காரமடை இடையே பொறியி யல் பணிகள் காரணமாக கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு 12.35க்கு மேட்டுப்பாளையம் சென்றடை யும் ரயில் (எண்: 06814) மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து மதியம் 1.05க்கு புறப்பட்டு 1.50க்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 06815) ஆகிய 2 ரயிலும் புதனன்று முதல் 3 நாட் களுக்கு (ஜூலை 20, 27 ஆம் தேதிகள்) ரத்து செய்யப்பட் டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி நாள்
கோவை, ஜூலை 13- மின்கம்பியான் உதவியாளர் தேர்விற்கு ஜூலை 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மின்கம்பியாள் உதவியாளர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின்கம்பியாள் உதவி யாளர் தகுதிகான தேர்வு செப்.24 மற்றும் 25 ஆகிய தேதி களில் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த மின்கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப் பப்படிவத்தை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மையத்தை தேர்வு செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஜூலை 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல் வர்களுக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0422 2642041, 95786 95796, 88385 83094, எண் களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
பொள்ளாச்சி, ஜூலை 13- பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் 44.5 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெய சித்ரா (48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் களது குடும்ப விழாவிற்காக பழனிக்கு கடந்த ஞாயிறன்று சென்றுள்ளனர். இந்நிலையில், திங்களன்று காலை வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சரவணகுமார் மற்றும் காவல் துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். இதனையடுத்து பொள்ளாச்சி திரும்பிய சரவணகுமார் உட்பட அவரது குடும்பத்தினர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 44.5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் ரூ.20 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயசித்ரா அளித்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தர வின் பேரில், பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்
கோவை, ஜூலை 13- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் முயற்சியின் காரணமாக தென்னக ரயில்வே நிர்வாகம், நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் ஜூலை 21 ஆம் தேதி முதல் இயக்க உத்தரவிட்டுள் ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல் லைக்கு நீண்ட நாட்களாக ரயில் இயக்கப் படாமல் இருந்து வந்தது. இந்த வழியாக ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்.21 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 22 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு 9 முறை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட் டது. இந்நிலையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் சேவை நிறுத்தப் பட்டது. அந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். கொரோனா காலத் தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தென்னக ரயில்வே மேலாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதே போன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினரும், ரயில்வே ஆலோ சனைகுழு தலைவருமான சு.வெங்கடே சனும் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனைத்தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை திரு நெல்வேலிக்கும், மேட்டுப்பாளையத்திற் கும் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தென்னக ரயில்வே அறி விப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்லையிலிருந்து மேட்டுப் பாளையத்திற்கு வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் சேவை தொடங்கு கிறது. மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் காலை 7.45 மணிக்கு திருநெல் வேலியை சென்றடைகிறது. அதுபோல் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்த டைகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், சங்கரன்கோவில், கடையநல் லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், சேரன்மா தேவி வழியாக திருநெல்வேலியை அடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருநெல்வேலி – மேட்டுப் பாளையம் சிறப்பு ரயிலை இயக்க உத்தர விட்ட ரயில்வே நிர்வாகித்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாராந்திர சிறப்பு ரயிலை ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள் ளாமல் தொடர்ந்து இயக்க வேண்டும். மேலும், இந்த ரயிலின் கட்டணத்தை 1.3 மடங்கு வைப் பது என்பது சாதாரண மக்களின் தலையில் சுமை ஏற்றுவதாகும். எனவே, அன்றாட கட்ட ணத்தில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகத்தில் உள்ள இரண்டு எம்பிக்களின் தொடர் முயற்சியால் இந்த ரயில்சேவை கிடைத்துள்ளதற்கு ரயில் பயணிகள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
தேங்கிய கழிவுநீர் அகற்றம்
கோவை, ஜூலை 13- கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வாளகத்தி னுள் சாக்கடை வடிகாலில் தேங்கியிருந்த கழிவுநீர் அகற் றப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் பின்பு றம் இரு சக்கர வாகனங் கள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் கழிவுநீர் தொட்டி உள்ளது. நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவு கள் அகற்றப்படாமல் இருந் தது. இதனால் கழிவுநீர் வெளி யேறி வாகனம் நிறுத்துமி டம், நடக்கும் பாதைகளில் தேங்கியது. மழை காலங் களில் மழை நீரோடு இந்த கழிவு நீரும் சேர்ந்து நடை பாதையில் தேங்குவதால் துர் நாற்றம் ஏற்பட்டது. இந்நிலை யில், புதனன்று கோவை மாந கராட்சி தூய்மை பணியா ளர்கள் கழிவுநீர் அகற்றும் நவீன ஊர்தி மூலம் கழிவு களை அகற்றி சுத்தப்படுத் தினர்.