districts

img

சூரல்மலை ஆற்றில் மழைநீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு

உதகை, ஜூன் 25- வயநாடு மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து கடந்த இரண்டு நாட்க ளாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நிலச்ச ரிவு ஏற்பட்டு பாதித்த சூரல்மலை  பகுதியில் உள்ள ஆற்றில் மழை நீர் அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண் டக்கை பகுதியில் கடந்த ஆண்டு  மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது உறவினர்களை இழந்தும், உடமைகளை இழந்தும் இன்றள வும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில் தற்போது வயநாடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப் படுகிறது. கடந்த மாதம் முதலே  ஆரம்பித்த மழையின் தாக்கம்  அவ்வப்போது கனமழையாக வும், மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு பேரி டர் ஏற்பட்ட முண்டக்கை, சூரல் மலை பகுதிகளில் கடந்த இரண்டு  நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் மழைநீர் அதிகரிப்பு காணப்படுகிறது. தற்போது சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது கடந்த ஆண்டு பேரிடர் ஏற்பட்ட போது சூரல்மலை பகுதியில்  இராணுவத்தினர் மூலம் தற்காலி கமாக அமைக்கப்பட்டிருந்த பெய்லி பாலம் பகுதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு பாலத்தின் உயரத்தை நெருங்கி கூடிய அளவிற்கு வெள்ளநீர் அதிகரித்து வருகி றது. அதேபோல சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில  இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேறோடு சாய்ந்து உள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏதேனும் மழை  பாதிப்பு ஏற்ப்பட்டால் அதனை உடனுக்குடன் சரிசெய்ய பேரி டர் மீட்பு குழுவினர் தயார் நிலை யில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.