districts

img

100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

ஈரோடு, நவ.22- ஈரோட்டில் பெய்து வரும் கன மழையால், 100க்கும் மேற்பட்ட வீடு களுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட் டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நி லையில், செவ்வாயன்று இரவு லேசான சாரல் மழை பெய்யத் துவங் கியது. நள்ளிரவு 12 மணி முதல் இடி யுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி  நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஈரோடு மாந கர் பகுதியில் அன்னை சத்யா நகர், மல்லி நகரின் மையப்பகுதியில் பிச்சைக்கார பள்ளம் ஓடை செல்கி றது. இந்த பகுதியில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மழை பெய் யும் போதெல்லாம் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர்  வீடுகளுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு  தான் இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் மிக வும் சிரமம் அடைந்தனர். ஓடைக ளில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத் திருந்தனர். இந்நிலையில், செவ்வா யன்று இரவு பெய்த பலத்த மழை யால் மீண்டும் பிச்சைக்காரன் பள் ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த மழைநீர் அருகே இருந்த அன்னை சத்யா நகர் மற் றும் மல்லி நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர். மாணவ, மாணவிகளில் பாடப் புத் தகங்கள் மழை நீரில் நனைந்தது. மேலும், வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி நின்றதால் அவர்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. இதுகுறித்து தகவல றிந்ததும் மாநகராட்சி பணியாளர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஓடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்து வருகின்ற னர். இதேபோல் ஈரோடு மாவட்டத் தின் புறநகர் பகுதியில் இரவு நேரத் தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் ஓடைகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளத்தூர் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. அப்பகுதியை சேர்ந்த ராணி என்பவர் வீடு மழையால் இடிந்து விழுந்தது. நல்ல வாய்ப் பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட் டது. பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணைப்பகுதிகளி லும் பரவலாக மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.