districts

img

அணை நீர் குறைவாக இருந்தாலும் மழையை நம்பி உழவுப்பணி தொடக்கம்

திருப்பூர், ஜூன் 10- திருப்பூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்துள்ள உடுமலைபேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட தாலு காக்கள் தென்மேற்கு பருவமழை யின் சாரல் மழை பெறும் பகுதி யாக உள்ளன‌. கேரளாவில் பருவ மழை தீவிரமடையும்போது இங்கு  தொடர்ந்து சாரல் மழை பெய்யும்.  இதனை பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் அவரை, தட்டை, பச் சைபயிறு, கொள்ளு மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்வர். உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி  வரும் பாம்பாறு, வால்பாறை பகுதியில் இருந்து சின்னாறு, கொடைக்கானல் வனப்பகுதியில் உற்பத்தியாகி வரும் தேனாறு உள்ளிட்ட சிற்றாறுகள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு, அமரா வதி அணை உள்ளது. மேலும், தமிழக வனப்பகுதி யில் உற்பத்தியாகும் சிற்றாறுக ளும், ஓடைகளும் அணைக்கு கை  கொடுத்து உதவுகின்றன. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற் றும் புதிய ஆயக்கட்டு பாசன திட் டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம்,  கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக  54ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும், சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற் றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அமராவதி அணைக்கு பெரிய  அளவில் நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை  மேற்கொள்வதிலும் தயக்கம் நில வுகிறது. 90 அடி உயரம் கொண்ட  அமராவதி அணையில் தற் போது 62.77அடி உயரத்திற்கு தண் ணீர் உள்ளது. அணைக்கு வினா டிக்கு 489 கனஅடி தண்ணீர் வந்து  கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட் டத்தின் ஆதார அணையாக உள்ள  திருமூர்த்தி அணையும் நீர்வரத்து இன்றி உள்ளது. இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப் பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76  ஆயிரத்து152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அதுமட்டுமின்றி தளி கால் வாயை ஆதாரமாகக் கொண்டு சுற் றுப்புற கிராமங்கள் பயன்பெறும்  வகையில் கூட்டு குடிநீர் திட்டங்க ளும் செயல்படுத்தப்படுகின்றன.  கோடை வெப்பத்தின் தாக்கத் தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைக ளுக்கும் நீர்வரத்து குறைந்து விட் டது. இதனால் காண்டூர் கால்வா யில் தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட் டது. தற்போதைய நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி  அணையில் 30.05 கன அடி  உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.  அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தென் மேற்கு பருவமழை பெய்வதற் கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ‌இதனால் விவசாயி கள் மும்முரமாக நிலத்தை உழுது  சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி கோடை  உழவுப்பணிகளை மேற்கொண் டுள்ளனர். மேலும் பழைய முறைப் படி உழவுமாடுகள் கொண்டும் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.