உதகை, ஜூலை 20- தேவர்சோலைக்குட்பட்ட பகுதிகளில் மழையால் சேத மடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூ ராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். பேபி நகரில் இருந்து செம்பக்கொல்லி வழியாக போஸ்பாரா வுக்கு மண் சாலை செல்கிறது. இந்த சாலையை செம்பக் கொல்லி, தர்ப்பக்கொல்லி உள்ளிட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக தார்ச்சாலை வசதி இல்லாததால், இந்த மண் சாலையை அப்பகுதி பழங்குடியின மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயன்படுத்தி வரு கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம் பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதனால் இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்நிலை யில், தற்போது பெய்த தீவிர தென்மேற்கு பருவமழையின் காரணமான மேற்கண்ட மண்சாலை சேதமடைந்து காணப் படுகிறது. இதனால், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என தேவர்சோலை பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம் என தொடர்ந்து மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள் ளனர்.