உதகை, ஜூலை 5- உதகையில் குத்தகை பணம் தராத தால் குதிரை பந்தய மைதானத்தை வரு வாய்த்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை மையப் பகுதியில் 52.34 4/16 ஏக்கர் நிலம் மெட் ராஸ் ரேஸ் கிளப் என்ற நிறுவனத்திற்கு 1978 ஆண்டு முதல் அரசாங்க மூலம் குத் தகைக்கு வழங்கப்பட்டது. 2001-க்கு பிறகு குத்தகை தொகையை செலுத்த அரசு மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டு, இதுவரை குத்தகை தொகையை செலுத் தவில்லை. மேலும, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குத் தகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் அல்லது நிலத்தை அரசே திரும்ப எடுத்து பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, உதகை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் மற்றும் வட் டாட்சியர் சரவணன் கண்ணன் தலைமை யில் காவல்துறையினரின் பாதுகாப்பு டன் வருவாய்த் துறையினர் வெள்ளி யன்று குதிரை பந்தய மைதான நிலத்தை மீட்டனர். இது குறித்து அறிவிப்பு பல கைகள் வைக்கப்பட்டு, அலுவலகத் துக்கு சீல் வைக்கப்பட்டது. உடனடியாக தோட்டக்கலைத்துறையினர் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணி களை உடனடியாக தொடங்கினர். இதுகுறித்து கோட்டாடட்சியர் மகா ராஜ் கூறும் போது, ‘குதிரை பந்தய மைதானம் ரூ.822 கோடி குத்தகை பாக்கி செலுத்த வேண்டும். மாற்றியமைக்கப் பட்ட குத்தகை தொகையை செலுத்த முடியாது என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர் வாகம் வழக்கு தொடர்ந்தது. குத்தகை தொகையை செலுத்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் கால அவகாசம் கோரி யது. வழக்கை விசாரித்த நீதிபதி குத்த கையை உடனடியாக செலுத்த வேண் டும் என அறிவுறுத்தியது. மேலும், குத் தகை தொகை செலுத்தாத பட்சத்தில் நிலத்தை அரசு உடனடியாக கையகப் படுத்த தீர்ப்பளித்தது. அதன்படி அரசு மீட்டெடுத்த 52.344/16 ஏக்கர் நிலம், நீல கிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத் தரவின் பேரில் நீலகிரி மாவட்ட தோட் டக்கலை துறைக்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டதன் அடிப்படை யில் தோட்டக்கலைத் துறையினர் மேற் படி நிலத்தில் பூர்வாங்க பணியை தொடங் கியுள்ளனர்’ என்றார். 130 ஆண்டு பழமையான இந்த குதிரை பந்தைய மைதானத்தை பல வெளி நாட்டு தலைவர்கள் மற்றும் பிர முகர்கள் வந்து குதிரை பந்தயத்தை பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.