districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரேபிஸ் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

கோவை, ஜூன் 25- கோவை மாவட்டத்தில் நாய்கள் வெறி பிடித்தால் மற்றும்  ரேபிஸ் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க தொலைபேசி எண்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதியிலுள்ள கால் நடை மருத்துவமனையில், எச்ஏஎஸ் (Humane Animal Society - HAS) என்ற தன்னார்வலர் சங்கம், நாய்கள் வெறி பிடித்தால் மற்றும் ரேபிஸ் நோய் குறித்து தெரிவிக்க, 24X7  நேரம் கண்காணிப்பு ஹாட்லைன் தொலைபேசி எண் வெளி யீட்டு விழா நடைபெற்றது. அப்போது தன்னார்வலர் சங்கத் தின் தலைவர் நமிதா கூறுகையில், பொதுமக்கள் தங்கள்  வீட்டில் வளர்க்கும் நாய்களை முறையாக பராமரித்து. அதற் கான நோய் தடுப்பூசி மருந்தினை கண்டிப்பாக போட வேண் டும். நாய்களின் நடத்தையில் ஏதாவது வித்தியாசம் அதா வது வெறி பிடித்தல் போன்ற நடத்தை தெரிந்தால், 9843789491 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் அதற்கு தகுந்த முறை யான சிகிச்சை நாய்க்கு வழங்கப்படும், என்றார். இதன்பின் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் சி.இளங்கோவன் பேசுகையில், ரேபிஸ் நோய் உள்ள நாய்கள் மனிதர்களை கடிப்பதால், அந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம்  அதிகம் உள்ளது. நாய் கடித்தால் உடனடியாக அரசு மருத்து வமனையில் உரிய தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண் டும், என்றார்.

80 வயது மூதாட்டிக்கு உடனடி கண்புரை சிகிச்சை!

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்

கோவை, ஜூன் 25– கோவை மாவட்டத்தில் ‘உங்க ளைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத் தின் கீழ், தமிழகத்திலேயே முதன் முறையாக, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் முன்னெடுப் பில், முதாட்டி ஒருவருக்கு கண்புரை நோய்க்கான அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது. சூலூர் வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, கருமத் தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப் போது, அங்கு வந்த கருமத்தம்பட்டி யைச் சேர்ந்த 80 வயதான லட்சுமி என்பவருக்கு கண்புரை நோய் இருப் பதை அறிந்த ஆட்சியர் உடனடியாக மருத்துவ உதவியும், அறுவை சிகிச் சையும் மேற்கொள்ளுமாறு மருத்து வர்களுக்கு உத்தரவிட்டார். இத னைத்தொடர்ந்து, கருமத்தம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் உடன டியாக மூதாட்டி லட்சுமியை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனுமதித்து, கண்புரை நீக்க  சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற னர். ஆட்சியரின் இந்த விரைவான மற்றும் மனிதாபிமான நடவடிக்கை, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள் ளது. மாநிலத்திலேயே முதல்முறை மாநிலத்திலேயே முதல்முறை யாக, ஆட்சியர் முன்னெடுப்பில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு  மருந்துத் துறையும், மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து சிறப்பு கண் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் 21, 2025 முதல், இதுவரை மதுக்கரை, தொண்டாமுத் தூர், நெகமம், காரமடை, சர்க்கார் சாமகுளம், சுல்தான்பேட்டை, வால் பாறை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் ஆகிய வட்டாரங்களில் 19  சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, முதியோர்களுக்கான கண் புரை கண்டறியும் முகாமினை ஆட்சி யர் தொடங்கி வைத்தார். தற்போது வரை மாவட்டம் முழுவதும் நடத்தப் பட்ட 19 முகாம்களில், 4011 நபர்கள் பரி சோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 236 நபர்களுக்கு கண் புரை நோய் இருப்பது கண்டறியப் பட்டு, அவர்களில் 168 நபர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய் யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 154 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் 103 நபர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 50 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற் றும் சர்க்கரை நோய் இரண்டும் இருப் பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிக ளும், ஆலோசனைகளும் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிரம்பிய பில்லூர் அணை பவானியாற்றில் உபரிநீர் திறப்பு

மேட்டுப்பாளையம், ஜூன் 25- தொடர் கன மழையால் மீண்டும் பில்லூர் அணை நிரம்பி விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து  வரும் பருவ மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. நூறு அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் புதனன்று காலை 87 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்த கார ணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து மாலை 6 மணியளவில் 96 அடியை எட்டியது. இந் நிலையில், தொடர் மழையால் அணைக்கான நீர் வரத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர துவங்கி புதனன்று இரவு 8 மணிய ளவில் அணை அதன் முழு கொள்ளளவான 100  அடியை  நெருங்கியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி  அதன் நீர்மட்டத்தை 97 அடியாக நிலை நிறுத்தி பராமரிக் கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான விநா டிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரிநீராக பவானி யாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கிய நிலையில் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆற் றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்கக்கூடாது என  அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வருவாய்துறை, காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன் கூட்டியே துவங்கிய பருவ  மழை காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி நிரம்பிய பில் லூர் அணை இம்மாதம் 16 ஆம் தேதி மீண்டும் நிரம்பியது. இந்நிலையில் புதனன்று மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கேயத்தில் புதிய ஐடிஐ மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர், ஜூன் 25 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் அமைய வுள்ள புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ)  2025 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப் பங்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பதிவு செய்யப்பட்டு வரு கிறது.  எனவே, இந்த வாய்ப்பினை மாணவ  மாணவிகள்  பயன்படுத்திக் கொள்ளலாம். அட்வான்ஸ்டு சிஎன்சி  மெசினிங் டெக்னீசியன் தொழில் பிரிவுக்கு 10ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இரண்டாண்டு பயிற்சி  காலம். மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல்& ஆட்டோமே சன், இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேசன் ஆகிய தொழிற்  படிப்புகளுக்கும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். ஓராண்டு பயிற்சிக் காலம் ஆகும். ஆடை தயா ரித்தல் ஓராண்டு தொழிற் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு வயது  வரம்பு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயது  வரம்பு இல்லை. பயிற்சியாளர்களுக்கு கல்விக் கட்டணம் இல வசம், ரூ.750 மாதாந்திர உதவித்தொகை, தமிழ் புதல் வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான பயிற்சி யாளர்களுக்கு மாதம் ரூ.1000, வரைபட கருவிகள், பேருந்து  பயண இலவச அட்டை, சீருடை, காலணிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும். பயிற்சி முடியும்போது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். மாணவர்கள்  சேர்க்கைக்கு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ்,  ஜாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் 2 போட்டோவுடன் காங் கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்திற்கு  நேரில்  வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 95977 80910, 95002 33407, 78689 28433, 81108 79919 ஆகிய  உதவி மைய   எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர்  மனிஷ் நாரணவரே தெரிவித்திருக்கிறார்.

சிக்னலில் நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் சிக்னலில், அடுத்த டுத்து நான்கு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக் குள்ளானது.  திருப்பூர் அவிநாசி சாலை, காந்திநகர் சிக்னல் அருகே  புதனன்று மாலை வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது,  குறுக்குச் சாலையில் இருந்து ஒரு கார் திடீரென உள்ளே  புகுந்தது. இதன் காரணமாக முதலில் வந்த கார் உடனடி யாக பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால்  வந்து கொண்டிருந்த மூன்று கார்கள் கட்டுப்படுத்த முடியா மல் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட் டது. முதல் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன. இந்த  விபத்தில் ஆட்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் காவல்  துறையினர் வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர்  செய்தனர்.

மனிஷ் நாரணவரே ஐஏஎஸ் திருப்பூர் ஆட்சியராக பொறுப்பேற்பு

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணி யாற்றி வந்த தா.கிறிஸ்துராஜ் பணி மாற்றம்  செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக மனிஷ்  நாரணவரே நியமிக்கப்பட்டார். புதன்கிழமை  மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை தந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் உள் ளிட்ட ஆட்சியரக அலுவலர்கள் வரவேற்ற னர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக அறை யில் மனிஷ் நாரணவரே கோப்புகளில் கையெ ழுத்திட்டு ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மனிஷ் நாரணவரே செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது, 2016ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி அலுவலராக தேர்வு பெற்றேன். இன்றைய தினம் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பெறுப்பேற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பு அளித்த தமிழ் நாடு முதலமைச்சருக்கு எனது  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலக அளவில் புகழ்பெற்ற இந்த சிறந்த மாவட்டத்திற்கு மக் கள் பணியாற்ற மிகவும் முக்கியப் பொறுப்பில்  இருக்கிறேன். தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும், சேவைகளையும் உடனுக் குடன் மாவட்டத்தின் கடைக்கோடி மக்க ளுக்கு கொண்டு சேர்ப்பதற்கு உண்டான முழு  முயற்சியும், நடவடிக்கையும் மேற்கொள் வேன். அது மட்டுமல்லாமல் நமது மாவட்டத் திற்கும், நமது மாநகர பகுதிகளுக்கும் அனைத்து சிறப்பு திட்டங்கள் வளர்ச்சி  பணிகளை முழு வீச்சில் செயல்படுத்து வேன். பொது மக்களின் கோரிக்கைகளை உட னடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று கூறினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள அலுவலகங்களின் செயல்பா டுகள் மற்றும் கோப்புகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு, பேரிடர் மேலாண்மைத் துறை அவ சர கால கட்டுப்பாட்டு அறையின் செயல்பா டுகள் மற்றும் பதிவேடுகள் குறித்து பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத் தளங்களில் உள்ள தீயணைப்பு கருவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீதியோரம் இருந்தவர்களுக்கு வீடு கொடுத்த ஆட்சியர் தா.கிறிஸ்துராஜுக்கு நரிக்குறவர் சமூகப் பெண் நன்றி

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த  தா.கிறிஸ்துராஜ் சாலையோரம் குடியிருந்த  நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 40 குடும்பங் களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கொடுத்தார் என்று  சொல்லி கண் கலங்கி நெகிழ்ச்சியுடன் அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் நன்றி தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் சுற்றுலாத் துறை இயக்குநராக பணி மாற் றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாலை தா.கிறிஸ்துராஜுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் ஆட்சியர் அலுவ லக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு  பாராட்டிப் பேசினர். இதில் தாராபுரம், அம்மாபட்டி பகுதியில்  வசித்து வரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த  வசந்தா என்ற பெண்மணி பேசும்போது, வீடுக ளின்றி சாலையோரம் தங்கியிருந்த 40 குடும் பங்களை சேர்ந்த தங்கள் இன மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பணிகளை துவக்கி, அனைத்து வீடுகளுக்கும் தனது சொந்த செலவில் டைல்ஸ் அமைத்து கொடுத்தவர் கிறிஸ்துராஜ் என்று கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து நரிக்குறவர் இன  பெண்கள் தங்களது கைகளால் உருவாக்கிய  பாசிமணி மாலையை அவருக்கு அணிவித்து  மகிழ்ந்தனர். நரிக்குறவர் சமூகப் பெண் பேசி யது அங்கிருந்தவர்களை மனம் நெகிழச்  செய்து பலருக்கு கண்கள் பணித்தன. உடுமலை மலைப் பகுதி குடியிருப்பு களுக்கு சாலை வசதி கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்திய போது, அதன் நியாயத்தைப் புரிந்து  கொண்டு, வன உரிமைச் சட்டப்படிஅங்கு சாலை அமைப்பதற்கு ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக் கது.

திருப்பூரில் வங்கதேசத்தினர் மூவர் கைது

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூரில், சட்ட விரோதமாக தங்கி  இருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட முத்தனம்பா ளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்த நபர்கள் தங்கி வேலை செய்வதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதை யடுத்து நல்லூர் காவல் நிலைய போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு வங்கதே சத்தை சேர்ந்த முகமது கொகோன் (45),  முகமது கபீர் ஹோசன் (35) மற்றும் முக மது சாண்டோ பிரமணிக் (18) என்ற  மூன்று நபர்களை சோதனை செய்த தில், அவர்கள் சட்ட விரோதமாக தங்கி  வேலை செய்தது தெரிய வந்தது. மூவர்  மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்த நபர் கைது

கோவை, ஜூன் 25- இன்ஸ்டாகிராமில் பாலோவர்களை அதிகரிக்கச் செய்ய பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற் றம் செய்து வந்த பொறியியல் பட்டதாரியை கோவை  மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது  புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அருண் குமார் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத் தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அந்த நபரை  கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில்  புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். அப்போது போலியான இன்ஸ் டாகிராம் ஐடி-யை பயன்படுத்தி, புகைப்படங்களை பதி வேற்றம் செய்து வந்தவர் செங்கல்பட்டு மாவட்டம் வீரா புரத்தை சேர்ந்த ராஜா (33) என்பது தெரியவந்தது. மேலும் பொறியியல் பட்டதாரியான ராஜா, சென்னை யில் உள்ள தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி  ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். மேலும்,  இவர் ராஜா, அருண்குமார் என்ற பெயரில் போலி யான இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவக்கி அதில் பல் வேறு இணையதளங்களில் பதிவிறக்கம் செய்த பெண்க ளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்துள் ளார். மேலும் இன்ஸ்டா  பக்கத்தில் பாலோவர்களை அதி கரிக்கச் செய்ய சில பாலோவர்கள் அனுப்பும் பெண்க ளின் ஆபாச புகைப்படங்களை கமெண்ட்களுடன் பதிவு  செய்து வந்துள்ளார். இவர் எதிர்பார்த்தது போல சுமார்  20,000 மேற்பட்டோர் ராஜாவின் போலி instagram கணக்கை பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு  இன்ஸ்டா  மூலம் ஒருவர் அனுப்பிய கோவையை சேர்ந்த  பெண்ணின் புகைப்படத்தை ஆபாச கமாண்டுகளுடன் ராஜா பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர்.

கோவில் சிலைகள் உடைப்பு: ஒருவர் கைது

கோவை, ஜூன் 25- கோவையில் கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட சம் பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்த னர். கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதி யில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் கடந்த 18  ஆம் தேதி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக  காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து  நடத்தப்பட்ட புலன் விசாரணையில், சிலைகளைச் சேதப் படுத்தியவர் வடமாநிலத்தைச் சேர்ந்த கரண் குமார்  (32) என்பவர் எனத் தெரியவந்தது. மது போதை யில் இந்தச் செயலை செய்ததாக அவர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரண் குமாரை கைது  செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு  செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலை யில், பாஜக மாநிலச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட கட்சியினர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, “எங்கள் ஊர் பிரச்சினையை நாங்களே பார்த் துக்கொள்கிறோம்” என ஊர் மக்கள் கூறியதால், அங்கு  வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: ஓய்வூதியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 25- ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்த ஒன்றிய அரசுக்கு ஓய்வூதியர்  கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள் ளது. இதற்கெதிராக உச்சநீதிமன்றம்  செல்வோம் எனவும் அறிவித்துள்ளது.  ஈரோட்டில், அஞ்சல், ஆர்.எம். எஸ்.ஓய்வூதியர் சங்கத்தினர் புத னன்று, தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க அலுவலகத்தில் செய்தியாளர் களை சந்தித்தனர். இதில், கோட்டத் துணைத் தலைவர் ஆர்.முருகேசன், செயலாளர் என்.ராமசாமி பொருளா ளர் வி.கே.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நேரடி நியமனம் பெற்ற அஞ்சல் எழுத்தாளர்களுக்கு முதல் 2  கட்ட பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும். போஸ்ட் மேன், மெயில் கார்டுகளுக்கு உயர் ஊதிய விகிதம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் முடித்து அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். நிதி மசோதாவோடு சேர்த்து ஓய்வூதிய விதிகளை திருத்தி  நிறைவேற்றியுள்ளது ஒன்றிய அரசு. இதன் மூலம் ஓய்வு பெற்ற தேதியை வைத்து வேறு வேறு வகையான ஓய் வூதியம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தன் வசம் எடுத்துக் கொண்டது. இது கடந்த 1982 இல்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  மற்றும் அரசியலமைப்பு சட்டம் விதி  14க்கு முற்றிலும் எதிரானதாகும். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது ஓய்வூதியர்களின் கூட்டு மேடை சார்பில் வழக்கு தொடரப்ப டும் என்றனர்.