கோவை, பிப்.9- மதுரை இலக்கிய மன்றம் மற்றும் ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை சார்பில், புலியகுளம் புனித அந்தோ ணியார் உயர்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை ஆசிரிய ருக்கு வீர மாராயம் விருது வழங்கப்பட்டது. தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்தல், சமூக சேவைகள் செய்தல், சீருடை பணி களில் மாணவர்களை சேர்த்தல் போன்று பணிகளின் அடிப் படையில் வீர மாராயம் விருது வழங்கப்படுகிறது. இந்நிலை யில் கோவை மாவட்டம், புலியகுளம் புனித அந்தோணி யார் உயர்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரிய ராக பணியாற்றி வரும் ஞா.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் என்ப வருக்கு வீர மாராயம் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு தினை மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக் கல்லூரியில் வைத்து மதுரை சரகத்தின் தமிழ்நாடு காவல் துறை துணைத்தலைவர் சு.பொன்னி, சென்னையில் உள்ள இந்திய வருமானத் துறையின் ஆணையர் (வரி விலக்கு) மு.ரவிராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சி யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.