districts

img

பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிடுக

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் சேலம், பிப்.22- பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியி றக்க பாதுகாப்பு அரசாணை உடனடி யாக வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்ப டுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண் டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக காலி யாக உள்ள அலுவலக உதவியாளர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தினர் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வியாழனன்று பணி களை புறக்கணித்து, தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஈ.அ.பிரபு தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெ.அர்த்தனாரி, மாவட்டப் பொருளாளர் மா.முருகபூபதி, இணைச் செயலாளர்கள் மா.அகிலன், ஜெ. ஜாகிர், மத்திய செயற்குழு உறுப்பி னர் அ.அருள் பிரகாஷ், மாவட்ட  துணைத்தலைவர் வெ.கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் தமிழ்நாடு வருவாய்துறை ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில், திருச் செங்கோடு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜயகாந்த்  தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. கோவை இதேபோல் கோவை ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட் டாட்சியர் அலுவலகங்களிலும், வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன் னதாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் நடைபெற்ற போராட்டத்திற்கு சங் கத்தின் தலைவர் சையது உசேன் தலைமை ஏற்றார். இதில், மாநிலச் செயலாளர் பார்த்தீபன், அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் செந் தில்குமார் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வட்டாச்சியர் அலுவல கத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரஜிகுமார் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற் றது. இதில் வட்டச் செயலாளர் செல்வ விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங் கள் முன்பு நடைபெற்ற காத்திருப் புப் போராட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத்  தலைவர் கண்ணன், செயலாளர் சிவக் குமார், பொருளாளர் நாகவேணி, துணைத்தலைவர்கள் ராஜீவ்காந்தி, அன்பு, இணைச்செயலாளர்கள் ராஜ் குமார், அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.