districts

img

ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்: விவசாயிகள் கண்டனம்

உடுமலை, மார்ச் 29 - பாசன வாய்க்கால்களின் மீது விதிமுறை களை மீறி ரியல் எஸ்டேட் துறையினர் பாலங் கள் மற்றும் சாலைகளை அமைத்து உள்ளார் கள். இதை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், நடைமுறையில் இல் லாத விதிகளை காரணமாக கூறி விவசாயி களை வஞ்சிக்கிறார்கள். இந்த அதிகாரிக ளின் மீது நடவடிக்கைக்கு எடுக்க விவசாயி கள் வலியுறுத்தி உள்ளனர். உடுமலை, குடிமங்கலம் பகுதியில் பரம் பிக்குளம் பாசனத் திட்டத்தின் படியும், மடத் துக்குளம் பகுதியில் அமராவதி அணையின்  பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டப்படி அணையிலிருந்து முதன்மை கால்வாய் முதல் கடைக்கோடி விவசாயிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல அரணி வாய்க் கால்கள் அமைக்கப்பட்டது. பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த  கால்வாய்களில் பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டும் என்றால் முறையாக அனு மதி பெற வேண்டும்.

இப்படி பல கட்டுப்பா டுகள் கொண்ட கால்வாய்கள் முறையாக பரா மரிப்பு செய்யப்படுவதில்லை.  பொதுப்பணித்துறையினரின் கவனக் குறைவால் பல இடங்களில் கால்வாய்கள் வரைபடத்தில் மட்டுமே உள்ளது. தற்பொ ழுது இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில்  அதிகமாக இருப்பதால் விவசாய நிலங்கள்  வீட்டுமனையாக மாறி வருகிறது. வீட்டுமனை களுக்கு செல்ல முதன்மை கால்வாய்களின் குறுக்கே கனரக வாகனங்கள் செல்லும் வகை யில் பாலங்கள் மற்றும் கால்வாய்களின் கரை களில் பாலங்கள் கட்டுப்பட்டு வருகிறது. இந்த பாலங்கள் கட்ட பொதுபணித் துறையி னர் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கி னார்கள் என்று தெரியவில்லை. சிறிய கால் வாய்களின் இடையே பாசன குழாய் மற்றும்  மின்கம்பங்கள் கொண்டு செல்ல விவசாயி கள் அரசு அனுமதி தந்துள்ளது. இருப்பினும்,  சில அதிகாரிகள் விவசாயிகளிடம் பொதுப் பணித் துறையின் தடையில்லா சான்று கேட்கி றார்கள். ஆனால், கால்வாய்களின் குறுக்கே  பாலம் கட்டுவதற்கு மட்டும் எப்படி அனுமதி  அளித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிக ளால் இப்பகுதியில் இருக்கும் கால்வாய் கள் அழியும் நிலையில் உள்ளது. கால்வாய் களை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் உட னடியாக தவறு செய்த அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வீட்டும னைகளுக்கு என்று போடப்பட்ட அனைத்து பாலங்கள் மற்றும் சாலைகளையும் அகற்ற  வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை  வைத்துள்ளனர்.