districts

img

திருப்பூரில் முக்கிய இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் இல்லாத அவலம் 100 சதவீதம் தூய்மை மாநகராட்சி என நற்சான்றிதழ் பெற்றால் போதுமா?

திருப்பூர், ஜன.24- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வகுக்கப்பட் டுள்ள வழிகாட்டுதல்படி அமைக்கப்பட வேண்டிய கழிப்பறைகள் 10 ஆண்டுகள் ஆகி யும் திருப்பூர் மாநகரப் பகுதிகளில் முழுமை யாக  அமைக்கப்படாமல் உள்ளன. தினசரி  நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில்கூட பொது  கழிப்பிடங்கள் இல்லாத அவலநிலை உள் ளது.   பொது கழிப்பிடம் இல்லா ஸ்மார்ட் சிட்டி: மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகர்ப்பு றங்களில் பொது கழிப்பறைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் திருப்பூரில் போதுமான பொது கழிப்பறைகள் இல்லை.  மேட்டுப்பாளையம் சாலை முதல் வளர்மதி பேருந்து நிறுத்தம் வரை, அதேபோல அவி நாசி சாலை காந்தி நகர் முதல் புஷ்பா பேருந்து  நிறுத்தம் வரை பொது கழிப்பறைகள் இல்லை. இப்படி மாநகரின் முக்கியப் பேருந்து நிறுத்தங்கள் பொது கழிப்பறை இல் லாமல் உள்ளன. திருப்பூர் குமரன் சிலை அருகில் உள்ள  பேருந்து நிறுத்ததிற்கு தினசரி ஆயிரக்க ணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து ஏறுவதற்கு வந்து செல்கின்றனர். கழிவறை வசதி இல்லாததால், பேருந்து நிறுத் தத்திற்கு வரக்கூடிய பயணிகள் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். மேலும் நகர, புறநகரப்  பேருந்துகளுடன், வெளியூர் பேருந்துகளும்  நின்று செல்லும் புஷ்பா பேருந்து நிறுத்தத்தில்  தினசரி காத்துக் கிடக்கும் நூற்றுக்கணக்கான  கல்லூரி மாணவ, மாணவியர்கள், தொழிலா ளர்கள், பெண்கள் கழிவறையின்றி மிகவும்  சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பயனற்று கிடக்கும் நம்ம டாய்லெட்: திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப் பதை தடுக்கவும், கழிப்பறைகளை அனைவ ரும் பயன்படுத்தும் வகையில் ஈர்க்கும் திட்ட மாக நவீன வசதிகளுடன் கூடிய “நம்ம டாய் லெட்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், மாற்றுத் திறனாளிகள் பயன்ப டுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் கூடிய  கழிப்பறை, ஆண்கள், பெண்கள் பயன்படுத் தும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.  இந்த தற்காலிக கழிவறையை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இத் திட்டத்தின் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பல இடங்களில் இது மக்களுக்கு எந்தவித  பயன்பாடும் இல்லாமல்தான் உள்ளன. திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலையில் நொய் யல் பாலம் அருகில் நம்ம டாய்லெட் திட் டத்தில் கழிவறைகள் அமைக்கப்பட்டன. இது  ஒரு வழிச் சாலை, இங்கு பேருந்து நிறுத்தம்  இல்லை. சுற்றியும் கடைகள், மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இச் சாலையில் இருந்து குடியிருப்புகளும் சற்றுத்  தள்ளியுள்ளன. இருப்பினும், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் திறந்தவெளியில் சிறு நீர், மலம் கழிப்பதைத் தடுக்க இங்கு டம்ம  டாய்லெட் திட்டத்தில் கழிவறை அமைக்கப் பட்டது. ஆனால் தற்போது பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது. கழிவறை மொத்தமும் முழுமையாக சேதம் அடைந்து, தண்ணீர் தொட்டி ஸ்டாண்ட் உடைந்து கிடக்கிறது. அதேபோல் குமரன் சிலை காதர்பேட்டை சாலைக்குள் கட்டப்பட்டுள்ள கழிவறை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஜெய்வா பாய் பள்ளி அருகில் உள்ள கழிப்பறை மோச மான நிலையில், முறையாக பராமரிக்கப்படா மல் உள்ளது.  முக்கிய இடங்களில் கழிப்பறை இல்லாம லும், கட்டப்பட்ட இடங்களில் பராமரிப்பு இல் லாமல் பல கழிப்பறைகள் மாநகரப் பகுதிகளில்  உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, சுகா தாரமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பொதுக் கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மேம்பட்ட கழிப்ப றைகள் நகரின் முக்கிய பகுதிகளில் அமைக் கப்பட வேண்டும் என பொதுவான வழிகாட்டு தல் உள்ளது. இருப்பினும் ஸ்மார்ட் சிட்டி  திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது 10 ஆண்டு கள் ஆகியும், அடிப்படை வசதியான கழிப்ப றைகள் கூட முழுமையாக அமைக்கப்படா மல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பொதுவெளியில் மலம் கழிக்காத, நூறு சதவிகிதம் தூய்மையான மாநகராட்சி என்று மட்டும் சான்றிதழ் வாங்கி  வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர்.  (ந.நி)