districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நத்தக்காடையூரில் பொதுக்கழிப்பிட வசதி: மார்க்சிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம்

திருப்பூர், நவ. 21 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா நத்தக்காடையூரில் பொதுக்க ழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வலியு றுத்தி, பொது மக்களிடம் கையெழுத்து  இயக்கம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. நத்தக்காடையூர் பகுதி மார்க்சிஸ்ட்  கட்சி கிளைக் கூட்டம் திங்களன்று என்.நவீன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கேயம் தாலுக்கா குழு உறுப்பினர் எம்.கணேசன், கிளைச் செயலாளர் இரா.செல்வராஜ் உள்பட கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: நத்தக்காடையூர் பேருந்து நிலையம் அருகில் பொது மக்கள் பயன் பாட்டிற்கு பொதுக் கழிப்பிடம் அமைக்க  வேண்டும். பொதுக் கழிப்பிட வசதி இல் லாததால் பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகள், புதன்கிழமை வாரச்சந் தைக்கு வரும் ஏழை, எளிய பெண்கள்  பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வளர்ந்து வரும் நத்தக்காடை யூரில் பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்த  வேண்டியது அவசியம். இக்கோரிக் கையை வலியுறுத்தி ஒரு வார காலம் மக் களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாரச்சந்தைக்குள் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. சந்தை கேட்டைப் பூட்டிவிட்டதால் எந்த மக்க ளுக்கும் பயனில்லாமல் போனது. அதே போல் விடியல் சேகர் எம்எல்ஏ தொகுதி  மேம்பாட்டு நிதி ரூ.3.50 லட்சத்தில் மீண் டும் சந்தைக்குள் வடக்கு பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டதால் யாருக்கும் பயனின்றிப் போனது. இப் படி பல லட்சம் அரசு பணம் வீணடிக்கப் பட்டது. இனி வருங்காலங்களில் பேருந்து நிறுத்தம் அருகே கட்டப்படும்  பொதுக் கழிப்பிடக் கட்டிடம் பொது மக்க ளுக்குப் பயன்படும் வகையில் கட்டப் பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி  கூறியுள்ளது. முன்னதாக இக்கூட்டத்தில் முதுபெ ரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் புதைத்த பிணத்தின் மீது  மதவாத அரசியல் செய்த பாஜகவினர்

திருப்பூர், நவ. 21 – திருப்பூரில் புதைக்கப்பட்ட பிணத்தின்  மீது பாஜகவினர் இழிவான முறையில் மத வாத அரசியலை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் ஆற்றங் கரையில் செல்லாண்டியம்மன் துறை பகுதி யில் மயானம் உள்ளது. இங்கு இந்துக்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் தென்னம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த ரவி என்பவர் உடல் இங்கு அடக் கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்  புதைக்கப்பட்டிருந்த இடத்தில் சிலுவை சாத் தப்பட்டிருந்தது. இதனைக் கண்டு பாஜகவி னர், இந்துக்களுக்கு சொந்தமான இடுகாட் டில் கிறிஸ்துவ உடல் புதைக்கப்பட்டதாகக் கூறி, அந்த சடலத்தை அங்கிருந்து அகற்ற  வேண்டும் என்று செவ்வாயன்று முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகா ரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து பாஜகவினரோடு பேச்சு வார்த்தை நடத்தினர். புதைக்கப்பட்ட ரவியின்  உறவினர்களும் அங்கு வந்திருந்தனர்.  இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண் டதில், ரவி பூர்வீகமாக இந்து குடும்பத்தைச்  சேர்ந்தவர் என்பதும், அவர் மட்டும் சமீபத்தில்  கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதே சமயம் அவரது குடும்பத்தினர் அனைவரும்  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும்  தெரிவித்தனர். அத்துடன் ரவியின் தாயார் இறந்தபோது  இதே செல்லாண்டியம்மன் துறை மயானத் தில்தான் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. எனவே தாயார் புதைக்கப்பட்ட இடத்திலேயே, தனது சடலத்தையும் அடக் கம் செய்ய வேண்டும் என ரவி விருப்பம் தெரி வித்ததால், ரவியின் சடலத்தை இங்கு அடக் கம் செய்ததாக குடும்பத்தினர் தெரிவித் துள்ளனர். எனினும் குடும்பத்தாரின் விளக் கத்தை ஏற்க மறுத்து புதைக்கப்பட்ட சட லத்தை இங்கிருந்து அகற்ற வேண்டும் என  பாஜகவினர் பிடிவாதம் செய்து பதற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். எனினும் புதைக்கப்பட்ட சடலத்தை மீண் டும் அப்புறப்படுத்துவது  உணர்வுப்பூர்வ மாக தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  என்று கருதிய ரவியின் குடும்பத்தார், இந்து  முறைப்படி ரவியின் உடலை அடக்கம் செய்து  கொள்வதாகத் தெரிவித்தனர். இந்து முறைப் படி சடங்குகளை செய்து, ரவி அடக்கம் செய் யப்பட்டிருந்த இடத்தில் வைத்திருந்த சிலு வையை அகற்றினர். இறந்தவர் தனிப்பட்ட முறையில் சமீபத் தில் மதம் மாறினாலும், அவரது தாயார் இந்து  மத நம்பிக்கை கொண்டவர், குடும்பத்தின ரும் இந்து மதம் சார்ந்தவர்களாக உள்ளனர்.  தன் தாயார் புதைக்கப்பட்ட இடத்தில்  தன்னைப் புதைக்க வேண்டும் என்ற, இறந்த வரின் விருப்பத்தையும் நிராகரித்து, இந்து  குடும்பத்தினரின் விருப்பத்தையும் நிராக ரித்து, குறைந்தபட்ச மனிதநேய உணர்வு கூட  இல்லாமல், தங்கள் குறுகிய மதவெறுப்பு அர சியலை முன்னெடுப்பதிலேயே பாஜகவினர்  இந்த இழிவான காரியத்தில் ஈடுபட்டனர். இது  அப்பகுதி மக்களிடையே பாஜகவினர் மீது  வெறுப்பையும், கடும் விமர்சனத்தையும் ஏற் படுத்தி உள்ளது.

மின் வாரிய ஓய்வூதிய சங்க கூட்டுக்குழு பேரவை

மின் வாரிய ஓய்வூதிய சங்க கூட்டுக்குழு பேரவை கோவை, நவ. 21- தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதிய சங்கங்களின் கூட்டுக்கு ழுவின்  கோவை மண்டல பேரவை தாமஸ் கிளப்-ல் செவ்வா யன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில், டிஎன்இபிடபிள்யுஓ மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் பங்கேற்று உரையாற்றினார். இதில்,  தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம், தநாமிவா ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கம், தமிழ் நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்க  நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, பறிக்கபட்ட பணப்பயன்களை உடனே  வழங்க வேண்டும். பிபி2 ஊழியர்களையும், ஓய்வூதி யர்களையும் பாதிப்பதால் திரும்ப பெறவேண்டும். கோர் பர்ஸ் பண்ட் எனும் நிதியத்தை அமுல்படுத்தகூடாது. மின்  வாரியத்தை மறு சீரமைப்பு என்ற பெயரில் கார்பரேட் கம்பெ னிகளிடம் ஒப்படைக்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. முடிவில் மண்டல செயலாளர் வி.மைக் கேல் நன்றி கூறினார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ஐஜி அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

கோவை, நவ. 21- இரு குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  அரசியல் கட்சி பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி, மாதர் சங்கம் தலைமையில் மேற்கு மண்டல ஐஜி அலு வகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், மேற்கு மண்டல அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, பொள் ளாச்சி அருகே கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி யன்று இரவு யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் வண்டி பாதையில் குழி  தோண்டி இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவ டிக்கை எடுத்தனர். இதனால் ஆத்திரம டைந்த யுவராஜ், தனது தோட்டத்தில் உள்ள  பொருட்களை சேதப்படுத்தியும், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார்.  இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தொடர்ந்து பாலி யல் தொல்லை கொடுக்கும் யுவராஜ் மற்றும்  கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த புகார் மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.  இந்த மனுக்கொடுக்கும் நிகழ்வில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் டி.சுதா,  மாவட்டத் தலைவர் ஜோதிமணி, பொள் ளாச்சி தாலுகா செயலாளர் ரேவதி, பொரு ளாளர் சித்ரா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உடனிருந்தனர்.