கோவை, ஜூன் 22- குடியிருப்புகள் வழி யாக லாரிகள் இயக்கப்படு வதால் விபத்து ஏற்படுவ தும், குடிநீர் குழாய்கள் உடைவதும் தொடர்கதை யாக இருப்பதால் பொது மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாவட்டம், குனியமுத் தூரை அடுத்த கோவைப்புதூர் - மைல் கல் அருகே 5க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் 100க்கும் மேற் பட்ட லாரிகள் மூலம் பல்வேறு பகுதி களுக்கு ஜல்லிக்கற்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதில், மைல்கல் பகுதியிலிருந்து கோவைப்புதூர் செல்ல தொட்டிராயன் கோவில் வீதி வழியாக லாரிகள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவ தாக கூறி அப்பகுதி மக்கள் 10க்கும் மேற் பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந் துள்ளன. இப்பகுதி வழியாக லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து கள் ஏற்படுகின்றன. இதுவரை 5 பேர் விபத்தில் சிக்கி உள்ளனர். ஒருவர் தனது காலை இழந்துள்ளார். மேலும், அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப் படுவதால் தண்ணீர் குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின் றன. எனவே குடியிருப்பு வழியாக லாரி கள் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர். இப்போராட்டம் குறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனிய முத்தூர் காவல் துறையினர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். இதையடுத்து, அந்த சாலை போக்குவரத்துக்கு மூடப்பட் டது. மேலும், உரிய நடவடிக்கை எடுப்ப தாக காவல் துறையினர் உறுதியளித்த னர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்ற னர்.