districts

img

கோவை: பேருந்துகள் நின்று செல்லாததை கண்டித்து வாலிபர் சங்கத்தின் தலைமையில் பொதுமக்கள் மறியல்

கோவை, டிச.15- சுல்தான்பேட்டை அருகே பேருந்துகள் நின்று செல்லாததை கண்டித்து, அப்பகுதி பொது மக்கள் வாலிபர் சங்கத்தின் தலை மையில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை அருகே உள்ளது சின்ன புத்தூர் கிராமம். இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பல்வேறு தேவைகளுக்காக வெளி யிடங்களுக்கு செல்ல பேருந்து  போக்குவரத்தையே நம்பியுள் ளனர். ஆனால், அந்த கிராமத்தில்  உள்ள நிறுத்தத்தில் பேருந்துகள்  நிற்பதில்லை. இதுகுறித்து அப் பகுதி மக்கள் பலமுறை அதி காரிகளிடம் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் பல்லடம்  - உடுமலை சாலையில் அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதனையடுத்து, சம்பவ இடத் திற்கு வந்த அரசு பணிமனை உடு மலை கிளை மேலாளர் நடராஜன்,  சூலூர் காவல் ஆய்வாளர் மாதை யன், சுல்தான்பேட்டை உதவி ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். காவல்துறையினர் மற்றும் போக்கு வரத்து அதிகாரிகள் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில், இனிவரும் காலங் களில் பல்லடம் - உடுமலை சாலை யில் செல்லும் அனைத்து பேருந்து களும், சின்னபுத்தூர் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித் தனர். இதையடுத்து 2 மணி நேரம்  நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.  இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க சூலூர் தாலுகா தலைவர் ரவி தாஸ் தலைமை வகித்தார். இதில்,  தாலுகா செயலாளர் தீனா, பொரு ளாளர் குருசாரதி, சின்னப் புத்தூர் கிளை தலைவர் மோகன்,  விவசாயிகள் சங்க சுல்தான் போட்டை ஒன்றிய செயலாளர் ரவி,  தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர்  ரங்கநாதன், பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.