districts

img

தோட்டத்துப்பாளையத்தில் முறையாக தண்ணீர் வழங்கக்கோரி சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், ஆக.11- திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது வார் டுக்கு உட்பட்ட தோட்டத்துப்பாளையம் லட் சுமி நகர் பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், முறை யாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வா கத்தை கண்டித்து ஞாயிறன்று சாலை மறி யல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோட் டத்துப்பாளையம் கிளைச் செயலாளர் மங்க லட்சுமி, முன்னாள் மாதர் சங்க ஒன்றியக் குழு  உறுப்பினர் மீனாட்சி ஆகியோர் தலைமை யில் தோட்டத்துப்பாளையம் பேருந்து நிறுத் தம் அருகில் ஞாயிறன்று சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறுகையில், 4 ஆவது வார்டுக்கு உட் பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதி, லட்சுமி  கார்டனில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு  முறை தான் தண்ணீர் வருகிறது. போதுமான  குடிநீர் கிடைக்காமல் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள் என  அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி றோம். அப்படியே தண்ணீர் வந்தாலும் இரவு  2 மணிக்கு தண்ணீர் விடுகின்றனர். இதனால்  தண்ணீர் வருவதே தெரிவதில்லை. கேட்டால்  விசில் அடிப்பதாக கூறுகின்றனர். அப்படி  வரும் தண்ணீரும் ஒரு மணி நேரத்தில் நிறுத்தி  விடுகிறார்கள். வேலை செய்துவிட்டு, வீட் டுக்கு வந்து அசந்து தூங்கும் நேரத்தில் தண் ணீர் விடுகிறார்கள். வாரத்திற்கு இரு முறை  தண்ணீர் வருவதாக கூறினார்கள். ஆனால்  ஒரு முறை கூட வருவதில்லை. கடைசியாக  3 ஆம் தேதி ஒரு மணி நேரம் தண்ணீர் வந்தது  அவ்வளவுதான். அதற்கு முன்பு கடந்த மாதம்  24 ஆம் தேதி தண்ணீர் வந்தது. தண்ணீர்  இல்லாமல் எப்படி உயிர் வாழ்வது. கவுன்சில ரிடம் கூறினால் தண்ணீர் அப்படித்தான் வரும்  நீங்கள் வேண்டுமானால் போராட்டம் நடத் திக் கொள்ளுங்கள் என்கிறார். இதற்கு ஒரு  தீர்வு வேண்டும் என்பதால் சாலை மறியலில்  ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல் ஆய்வாளர் ஜெகநாதன், உதவி ஆய் வாளர் செல்லத்துரை ஆகியோர் சாலை மறிய லில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மண்டல அதிகாரி கள் வந்து குடிநீர் வழங்குவது தொடர்பாக  உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட் டத்தை கைவிடுவோம் என கூறி போராட் டத்தை தொடர்ந்தனர். இதைதொடர்ந்து மண் டல உதவி பொறியாளர் சுரேஷ் சம்பவ இடத் திற்கு வந்து முறையாக குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இப்போ தைக்கு லாரியில் தண்ணீர் கொண்டு வந்து  விநியோகிப்பதாகவும், நாளை முதல் முறை யாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். இதையடுத்து 1 மணி  நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறி யல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட் டனர். அதன் பின் மாலை மாநகராட்சி லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட் டது. இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப் பினர்கள் எ.சிகாமணி, ஆர்.மைதிலி, ஜி.சம் பத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மகாலிங் கம், தன்ராஜ், ரேவந்த், கிளைச் செயலா ளர் சுமதி, வாலிபர் சங்க நிர்வாகி ப.தேவராஜ் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்ற னர்.