districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, ஜன.31- அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர்  ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளை யத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இங் குள்ள பொதுமக்களுக்கு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடு களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங் கப்பட்டு, ஒருநாள் விட்டு, ஒருநாள் குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட் களாக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை. இதனைக் கண்டித்தும், ஆழ் குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பாதுகாக்கப்பட்ட  குடிநீர் சீராக விநியோகிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் மைக் கேல்பாளையம் நால் ரோட்டில் திங்க ளன்றுகாலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் காவல் துணை ஆய்வாளர் கார்த்திக் தலை மையிலான காவல் துறையினர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், சீரான குடி நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத் தின் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.