பயிரை காக்க சூரிய மின்வேலி
ஈரோடு, டிச.25- தாளவாடி வனச்சரகத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பயிரை காக்க சூரியமின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இதில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் விவசாய நிலத்தில் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் வனத்துறை யினர் இணைந்து அந்த அகழியை ஒட்டி இரியபுரம் முதல் மல்குத்திபுரம் வரை 4 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ரூ.16 லட்சம் செலவில் வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுவதை தடுக்கும் வகையில் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது. இதனை ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா தொடங்கி வைத்தார்.
கொசு மருந்து தெளிக்க சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர், டிச.25 - வேலம்பாளையம் பகுதியில் கொசு தொல்லையால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த வாரத்தில் மூன்று நாட்கள் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் காமாட்சியம்மன் கோயில் அருகி லுள்ள பொதுக் குழாயில் குடிநீரை நிறுத்தாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட வேண்டும். தினமும் குப்பை எடுக்கும் வண்டிகள் தவறாமல் வருவதை உறுதி செய்திட வேண்டும். வீதிகள் தோறும் சாக்கடைகளைத் தூர்வாரி, கழிவுநீர் தேங்காமல் செல்ல வழிவகை செய்திட வேண்டும். வாரத் திற்கு 3 முறை கொசு மருந்து தெளித்திட வேண்டும். தோண்டிப் போடப்பட்டு, பல மாதமாக மண் சாலையாக, குண்டும் குழியுமாக உள்ளது. இச் சாலைகளை உடனடி யாக, தரமான தார்ச்சாலைகளாக அமைத்துத் தர வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கொடி கம்பம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
கோவை, டிச. 25- துடியலூர் பகுதியில் பாஜக கொடி கம்பம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர், கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் அருகே உள்ள காந்தி காலனி பேருந்து நிறுத்த பகுதியில் பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. அங்கு பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பம் அமைக்கும் பணிகளை அக்கட்சி யினர் ஈடுபட்டனர். இதற்கு அங்குள்ள ஏ.டி. காலனி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் கொடி கம்பம் அமைக் கும் பணியை நிறுத்துவதாக பா.ஜனதா வினர் தெரிவித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த பா.ஜனதா வை சேர்ந்த 2 பேர், கட்டாயமாக கொடிக் கம்பம் அமைக்க வேண்டும் என்று மீண்டும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்ததும், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோ தரன், துணை காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து பா.ஜனதாவினர் மற்றும் பொது மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி னர். இதைதொடர்ந்து கொடி கம்பம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
கிருஸ்துமஸ் தாத்தா நடனமாடி பிளாஸ்டிக் விழிப்புணர்வு
திருப்பூர், டிச. 25 - கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஞாயிறன்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பூர்-அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ தூய பவுல் ஆலயத்தில் பிளாஸ் டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமையில், மாணவர்கள் வழிபாடு செய்ய ஆலயத்திற்கு வருபவர்களிடம், நமது உடலுக்கும், நிலத்திற்கும் கேடுகளை விளை விக்கும், ஒருமுறை பிளாஸ்டிக் பயன்படுத் தினால் அது நமக்கு பெரும் பிரச்சனைகளை தரும், பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தி புற்றுநோய் உருவாக்க வேண்டாம், மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரி னங்களுக்கும் தீங்கு விளைவிக்கும், பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துவோம், நெகிழி பொருட்களை ஒழித்து மாசில்லா தமிழகத்தை உருவாக்கு வோம் என்று கூறியும், கிருஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு நடனமாடியும், விழிப்புணர்வு வாச கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், பதாகைகளை ஏந்தியும், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற் படுத்தினர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ் விற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
விஷம் குடித்த இருவர் பலி
உதகை, டிச. 25- ஊட்டி தாவரவியல் பூங்காவில் விஷம் குடித்த இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம், ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (36). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந் தைகள் உள்ளனர். இதில், இத்தம்பதியிடையே தகராறு ஏற் பட்டு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெய்சங்கருக்கு மேட்டுப் பாளையத்தை சேர்ந்த, ராதா என்ற பெண் ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் ஜெய்சங்கர் ராதாவை இரண்டாவ தாக திருமணம் செய்து கொண்டதாக கூறப் படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராதாவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டில் தந்தையு டன் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்த ஜெய்சங்கரின் மகன்கள் ஜெய்சங்கரிடம் சரி யாக பேசாமல் இருந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்சங்கர், கடந்த வாரம் ராதாவுடன் ஊட்டி அரசு தாவர வியல் பூங்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே கொண்டு வந்த விஷத்தை ஜெய் சங்கரும், ராதாவும் குடித்து உள்ளனர். அப் போது இருவரும் தாவரவியல் பூங்காவில் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் 108 ஆம்பு லன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் கடந்த வாரம் உயிரிழந்தார். ராதா ஞாயிறன்று பரிதா பமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஊட்டி மத்திய போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 174 (சந்தேக மரணம்) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
விவசாயி மீது போலீசார் தாக்குதல் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
திருப்பூர், டிச. 25- விவசாயியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு தினந்தோறும் திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறி களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஞாயிறன்று காலை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு வந்த விவசாயியை சந்திராபுரம் செக் போஸ்ட் அருகே காவலர் ஒருவர் தாக்கியதாக கூறப் படுகிறது. இதனால் தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் விவசாயி மீது தாக் குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.