districts

img

போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த போராட்ட விளக்க வாயிற் கூட்டம்

தாராபுரம், ஜூலை 30 - திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த போராட்ட விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியூ சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆக.3 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கக் கூட்டம் தாராபுரம் அரசுப் பணி மனை முன்பு மண்டல துணைத் தலைவர் டி.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க நிர்வா கிகள் பேசுகையில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தைப் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவு பற்றாக்குறையை அரசே ஏற்று பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும். ஓய்வு பெறும்  தொழிலாளியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும்  கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வு பெற்ற தொழி லாளிக்குப் பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற  தொழிலாளர்களுக்கு 80 மாத காலமாக பஞ்சப் படி வழங்கப்படாமல் உள்ளது அதை உடனடியாக வழங்க  நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட போக்குவரத்து ஊழி யர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசி னார்கள். இக்கூட்டத்தில் மண்டல தலைவர் கந்தசாமி, துணை  பொதுச் செயலாளர் விஸ்வநாதன், தாராபுரம் கிளை தலைவர்  அப்துல் ஜப்பார், செயலாளர் சத்தீஸ்வரன், ஓய்வு பெற்றோர்  நல அமைப்பின் நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, பொன்னுச் சாமி, முத்துச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முடிவில் கிளை பொருளாளர் சோமசுந்தரம் நன்றி தெரி வித்தார்.