districts

பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணியை மீண்டும் துவங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உதகை, ஆக.24- பந்தலூர் அருகே ரூ.1 கோடி திட்ட மதிப்பிலான பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரி தும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர்  அருகே உள்ள மாங்கம்வயல், பந்த பிளா, அம்மன்காள் ஆகிய பகுதி களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனைக்கு செல்வ தற்கும் கடலைகொல்லி வழியாக குந்தலாடி அல்லது அம்பலபாடி வழியாக பொன்னானிக்கு செல்ல வேண்டும். இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், மாங்கம்வயலில் ஆற்றின் நடுவே இருந்த பழைய  பாலமும் பழுதடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மேலும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூட லூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் புதி தாக பாலம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின் பழைய பாலத்தின் அருகே புதி தாக பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. ஆனால், திடீரென பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. பாலத்தின் இரண்டு  பக்கமும் மண் நிரப்பபடாமலும், சிமெண்டு தளம் மற்றும் பாலத்தை  ஒட்டிய இணைப்பு சாலை அமைக் கபடாமலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் பெரிதும் சிரமப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் பாலத் திற்கும், சாலைக்கும் இடையே  மூங்கில் பாலம் அமைத்து பொது மக்கள், மாணவ, மாணவிகள் கடந்து வருகின்றனார். அவ்வாறு பாலத்தை கடந்து செல்லும்போது, ஒருசில நேரங்களில் ஆற்றுக்குள் தவறி விழும் நிலையும் உள்ளது.  இதேபோல், அவசர தேவை களுக்கு மருத்துவமனைக்கு செல்ல எந்த ஒரு வாகனமோ, ஆம்பு லன்ஸ்களோ செல்ல முடிவ தில்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகளையும் சுமந்து செல் லும் நிலை நீடிக்கிறது. அதனால்  பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிப்பதோடு, பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள் ளனர்.