திருப்பூர், அக்.28– திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டா டப்பட்டது. பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக வாகன ஜோதி பேரணி தமிழ் நாடு முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளது. 1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொது சுகாதாரத்துறை பல மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு 2022இல் 100 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளது. வாகன ஜோதி பேரணி திருப்பூர் மாவட்டத் திற்கு வியாழக்கிழமை வந்தது. பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை ஏற்றார். முன்னதாக, இவ்விழாவில் சுகாதாரத் துறையில்; சிறப்பாக பணியற்றிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பூப்பந்து விளை யாட்டில் வெற்றி பெற்ற 4 நபர்களுக்கும், டேபிள் டென் னிஸ் விளையாட்டில் வெற்றி பெற்ற 3 நபர்களும், செஸ் போட் டில் வெற்றி பெற்ற 6 நபர்களுக்கும், கேரம் விளையாட்டில் வெற்றி பெற்ற 6 நபர்களும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற 6 நபர்களும், சாட்புட் விளையாட்டில் வெற்றி பெற்ற 7 நபர்களும், இசை நாற்காலி சுற்றுதல் விளையாட் டில் வெற்றி பெற்ற 3 நபர்களும், லெமன் வித் ஸ்பூன் விளை யாட்டில் வெற்றி பெற்ற 2 நபர்களும், கைப்பந்து விளையாட் டில் வெற்றி பெற்ற 32 நபர்களும், பந்து வீச்சு விளையாட்டில் வெற்றி பெற்ற 24 நபர்களும், கயிறு இழுத்தல் விளையாட்டில் வெற்றி பெற்ற 28 நபர்களும், மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற 25 நபர்களும் என மொத்தம் 146 நபர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இத்துறை யில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பரிசு மற்றும் பாராட் டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கி னார். இதில் திருப்பூர் மாவட்ட இணை இயக்குநர் மருத்துவர் கனகராணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஜெக தீஸ்குமார், மாநகர் நல அலுவலர் ஹரிகிருஷ்ணன் உள்பட துறை சார்ந்த அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.