ஈரோடு, மார்ச் 14- ஈரோடு மாநகராட்சியில் பொது வெளி யில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாநக ராட்சி சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி சுகா தார அதிகாரிகள் கூறியதாவது, ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, குப்பை தொட் டிகள் இல்லாத மாநகரை உருவாக்க வேண் டியது இத்திட்டத்தின் நோக்கம். தொடக் கத்தில் இந்த திட்டம் சுமையாக இருந்தாலும் இப்போது 90 சதவிகிதம் மக்கள் குப்பையை முழுமையாக பிரித்து தூய்மை பணியாளர் களிடம் வழங்குகிறார்கள். இதனால் இந்த திட்டம் வெற்றி பெற்று வருவதாகவே நம்பு கிறோம். மேலும், சிலர் பொதுவெளியில் குப்பை போடுவதை கண்டறிந்து அதை தடுக்கவும், மீறினால் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஈரோடு மாந கராட்சி மக்களுடன் இணைந்து இந்த திட் டத்தை வெற்றிகரமாக மாற்றும் நடவடிக் கையில் இறங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக குப் பைகளை வீதியில் வீச வேண்டாம். உங்கள் வீட்டின் முன்பு மூடியிட்ட குப்பை தொட்டி களில் குப்பையை பிரித்து வைத்தால் அதை மாநகராட்சி பணியாளர்கள் சேகரித்துக் கொள்வார்கள். அப்படி உங்கள் வீதிக்கு குப்பை சேகரிப்பவர்கள் வரவில்லை என் றால் ஈரோடு மாநகராட்சி புகார் எண் 94890 92000 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யலாம். 0424 2251616 என்ற தொலை பேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். யாரும் குப்பைகளை நீர் நிலைகள், ஓடைகளில் போட வேண்டாம். அப்படி போடுவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் வரை கண்டிப்பாக அபராதம் விதிக்கப் படும். மரக்கிளைகள், இலைகள் உள்ளிட்ட கழிவுகளை சாலையில் போடவோ, எரிக் கவோ வேண்டாம். மேற்கூறப்பட்ட எண் களில் தகவல் தெரிவித்தால், திடக்கழிவு மேலாண்மை பிரிவு தூய்மை பணியாளர் கள் எடுத்துச்சென்று விடுவார்கள். கட்டி டங்கள், தொழில் நிலையங்கள், வீடுகள் புதுப்பிக்கும் போது வெளியிடப்படும் கழிவு களை சாலை ஓரத்தில் அல்லது வெளி இடங் களில் கொட்டினால் அபராதம் விதிக்கப் படும். இதுதொடர்பாக அதிகாரிகளை அணு கினால் குப்பை மற்றும் கழிவுகளை அகற் றும் வழிமுறைகள் தொடர்பான ஆலோ சனைகள் வழங்கப்படும். ஈரோடு மாநக ராட்சி குப்பை இல்லாத மாநகராட்சி என்ற பெருமையை பெற, பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு சுகா தார அதிகாரிகள் கூறினர்.