தருமபுரி, பிப்.15- நல்லம்பள்ளி அருகே குடிநீர் குழாயை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட போயர் கொட்டாய், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட போயர் சமுதாயத் தைச் சார்ந்த குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்களுக்காக பால ஜங்கமனஹள்ளி ஊராட்சி நிர்வாகத் தின் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் 25 வருடங்களாக குடிநீர் விநியோகிக் கப்பட்டு வந்தது. இந்நிலையில், புத னன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள், குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அவற்றை சீரமைக்காத படி கற்களை கொண்டு மூடியுள்ளனர். இதனால், வியாழனன்று காலை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் என அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட் டது. இதனால் ஆவேசமடைந்த அப்ப குதி பொதுமக்கள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்ட இடத்தில் குவிந்து தர் ணாவில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் குழாய்களை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழாய்களை சீரமைத்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.