திருப்பூர், ஜன.20- பி.என். சாலையில், போயம்பாளையம் முதல் கூத்தம்பா ளையம் வரை பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப் பட்டுள்ள குழிகளை மூடக்கோரி வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட போயம்பாளையம் முதல் கூதம்பாளையம் வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இது பெரு மாநல்லூர் செல்லும் முக்கிய சாலை என்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து நெறிச் சல் ஏற்படும் பகுதியாக உள்ளது. இதில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தும் குழிகள் சரியாக மூடப்படாமலும், சாலை சீரமைக்கப்படாம லும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது மண் துகள் கள் புழுதி புயல் போல் பறப்பதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் விபத்து களும் ஏற்படுகிறது. எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள் ளனர்.