districts

img

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை

கோவை, டிச.23-  குனியமுத்தூர் பகுதியில் 30 அடியாக இருந்த சாலையை ஆக்கிரமிப்பின் காரணமாக, 15 அடியாக சுருங்கியுள்ள தால், ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண் டும் என்கிற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத் துள்ளனர்.  கோவை குனியமுத்தூர் பகுதிக்குட்பட்ட பாலக்காடு பிர தான சாலையில் ஆரம்பித்து, செங்குளம் வரை செல் லும் ஜெ.ஜெ.நகர் பிரதான சாலையில் ஏராளமான குடியிருப் புகள் அமைந்துள்ளன. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பலரும் ஜெ.ஜெ.நகர் பிரதான சாலை வழியாகத் தான் பாலக்காடு சாலையை அடைய முடியும். ஆனால், பாலக் காடு சாலையின் ஆரம்பத்திலேயே இருபுறமும் கடைக ளும், மாடிப்படிகளும் கட்டி, சாலை 20 அடி சந்தாக மாறி விட்டது.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதி காரிகளிடம் முறையிட்டோம். எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப டுத்திட வேண்டும், இல்லையென்றால், தொடர் போராட்டத் தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.