விபத்துகளை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்கள் கோரிக்கை
விபத்துகளை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்கள் கோரிக்கை நாமக்கல், ஏப்.25- ராசிபுரம் எல்ஐசி பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் இருந்து ஆண்டக ளூர் செல்லும் வழியில் எல்ஐசி பகுதி உள்ளது. இப்பகு தியின் தெற்கே உள்ள ரயில்வே மேம்பாலம் ஆபத்தான வளைவு கொண்டதாக உள்ளது. அதேபோல வடபுறம் அண்ணா காலனி பகுதியிலும் வளைவு உள்ளது. இத னால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், நகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டு பகுதியான எல்ஐசி காலனி பகுதியில் தனியார் பள்ளிகள் உள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் சென்று வருகின்றனர். மேலும் ரயில் நிலையம், தனியார் மருத்துவமனை போன் றவை உள்ள நிலையில், மாணவ மாணவிகள், பொதுமக் களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு அவசியம் என்பத னைக் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அண்மையில் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர், ஒரு பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைத் தாக்கினர். இதுதொடர்பாக காவல் நிலை யத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது போன்ற சம்பவங்களைத் தடுக்க காவல் துறை கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டியது அவசியம் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை
கோவை, ஏப்.25- பேரூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சொந்த மகனையே கத்தியால் குத்தி கொன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் 45. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், புதனன்று மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள் ளார். இரவு சுமார் 8.30 மணிக்கு மாயன் அவரது மனைவி முத்தம்மாள் இரண்டாவது மகன் முத்துக்குமார் ஆகியோர் வீட்டில் இருந்து உள்ளனர். அப்பொழுது மாயன் முட்டை வறுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, மூத்த மகன் முகேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்து உடனே வீட்டில் வெளியே இருந்த செம்பை எடுத்து மாயனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். அப்பொழுது தந்தை மகன் இருவ ருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திர மடைந்த மாயன் தனது மகனை தாக்கி உள்ளார். மனைவி முத்தம்மாள் இருவரையும் தடுத்து உள்ளார். இந்நிலையில், மாயன் அருகிலிருந்த சிறிய கத்தியால் முகேஷை இடது கழுத்து மற்றும் முதுகு, கால் பகுதியில் குத்தி உள்ளார். வலி தாங்க முடியாமல் மகன் கீழே விழுந்து துடித்து உள்ளார். பின்னர் இரண்டு சக்கர வாகனத்தில் அவரது தம்பி முத்துக்குமார் தனது நண்பர்களுடன் சிகிச் சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் கொண்டு சென்று அனுமதித்தனர். இந்நிலையில், வியாழ னன்று சிகிச்சை பலன் அளிக்காமல் முகேஷ் உயிரிழந்தார். இதை அடுத்து கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நாமக்கல், ஏப்.25- வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் 600 மூட்டை மஞ்சள் ரூ.60 லட்சத்திற்கு விற்பனையானது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாயன்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்து குவித்தனர். மேலும் ஆத்தூர், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கொள்முதலுக்காக வந்திருந்தனர். விரலி ரகம் குவிண்டால் ரூ.17,607 முதல் ரூ.20,533 வரையிலும், உருண்டை ரகம் ரூ.15,784 முதல் ரூ.16,859 வரையிலும், பனங்காளி ரகம் ரூ.25,203 முதல் ரூ.29,502 வரையிலும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 600 மூட்டை மஞ்சள் ரூ.60 லட்சத்திற்கு விற்பனையானது.
உதகை: தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை
உதகை, ஏப்.25- தேர்வில் தோல்வியடைந்ததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த ஜெகதலா பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3 ஆவது மகன் குன்னூர் வெலிங்டன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய அரசின் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுவதால், மாநில அரசு பாடத்திட்டத்திற்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இதில் இம்மாண வர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்து, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில், ஒரு கட்டத்தில் மன அழுத்தம் அதிகமான தால், தனது தாயாரின் சேலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். இவ்வழியாக சென்றவர்கள் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழ்ந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்பொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடை சீசனுக்கு பூங்கா தயார்
உதகை, ஏப்.25- கோடை சீசனுக்கு கோத்தகிரி நேரு பூங்கா தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கிய நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் அதற்கான முன்னேற்பாடு நடவ டிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த லின்படி பேரூராட்சி செயல் அலுவலர் சதாசி வம் தலைமையில் பூங்கா பராமரிப்புப் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற் றது. இதனையடுத்து பூங்காவில் சுற்றுச்சு வர், அனுமதி சீட்டு வழங்கும் கட்டிடம், பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்று. தற்போது நேரு பூங்கா புதுப்பொலிவு பெற்று உள்ளது. மேலும், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பூங்கா வில் உள்ள மலர் செடிகள் மற்றும் புல் தரைகள், சிறுவர்கள் பொழுதுபோக்கு உபக ரணங்கள் அனைத்தும் சிரமைக்கப்பட்டு பூங் காவானது புத்துயிர் பெற்றுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பூங்காவிற்கு வரும் சுற்று லாப் பயணிகள் தங்களின் சுற்றுலா நினைவு களை நினைவு படுத்தும் வகையில் சிறப்பு புகைப்படங்கள் மற்றும் செல்பி புகைப்ப டங்கள் எடுத்து மகிழ்விக்க நம்ம கோத்த கிரி, ஐ லவ் கோத்தகிரி, பறவையின் சிறகு போன்ற வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சமவெளிப்பகுதிகளில் நிலவும் வெயிலை சமாளிக்க அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதையொட்டி பூங்கா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களின் சுற்றுலாவை அனுப விக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், சுகா தார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பூங்கா ஊழி யர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழிப்பாதையை ஆக்கிரமித்த அறநிலையத்துறை அதிகாரி - புகார் மனு
சேலம், ஏப் 25- சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தெப்பக்குட்டைப் பகு தியைச் சேர்ந்த ராஜாராம் உள்ளிட்ட பகுதி மக்கள், அம்பேத் கர் மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமை யில் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் வட்டம் தெப்பக்குட்டை பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், அங்கு பட்டா நிலத்தின் கிழ் வரும் பாதையை சுமார் 25 ஆண்டுகளாக, வழிப்பாதையாக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எங்கள் ஊர் பகுதி யில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சின்ன கேசவ பெருமாள் கோவிலின் அதிகாரி (இ.ஓ), நில அளவை யாளர் மற்றும் வருவாய்துறைச் சார்ந்த அலுவலர்கள் சிலர் வழிப்பாதையை நான்கு அடி அகலத்திற்கு ஆக்கிரமித்துள் ளனர். அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த பாதையை பயன் படுத்த முடியாத சூழல் ஏற்படும். மேலும், எங்கள் நடை பாதை உரிமையும் முற்றிலுமாக பறிக்கப்படும். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, வழிப்பாதையை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் கோயில் இ.ஓ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் துண்புறுத்தல் முதியவருக்கு 40 ஆண்டு சிறை
திருப்பூர், ஏப். 25 - திருப்பூரில் சிறுமியை பாலியல் ரீதி யாக சீரழித்த முதியவருக்கு. திருப்பூர் மகிளா நீதிமன்றம் 40 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த அ.சிவா (62) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி, தனது மளிகை கடைக்கு பென்சில் வாங்க வந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவ றாக நடந்து கொண்டார். இதனால் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அனாதை ஆசிரமத்திற்கு வழங்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டது. இந்த குற்றத்திற்காக 2020 ஆம் ஆண்டு ஜன.11 அன்று சிவா கைது செய் யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் இருந்த அவருக்கு, திருப்பூர் மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதில் சிவாவுக்கு குற்றம் ஒவ்வொன் றிற்கும் தலா 20 ஆண்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தம் 40 ஆண்டு கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பத்திரிகையாளர்களை மணிக்கணக்கில் காக்க வைத்த பாஜக வேட்பாளர்
பத்திரிகையாளர்களை மணிக்கணக்கில் காக்க வைத்த பாஜக வேட்பாளர் திருப்பூர், ஏப்.25- திருப்பூரில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு 10.30 மணிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து விட்டு, பகல் 12 மணிக்கு மேல் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தாமதமாக வந்தார். பாஜக மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர் முருகா னந்தம் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக வியாழனன்று காலை தகவல் அனுப்பப்பட்டது. அதையடுத்து பத்திரிகை யாளர்கள் 10.30 மணியளவில் அங்கு சென்று காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் அவர் வரவில்லை. இதனால் சில பத்தி ரிகையாளர் வெளியேறி சென்றனர். அதன்பிறகு ஒருவழி யாக பகல் 12.10 மணியளவில் அவரும், மாவட்டத் தலைவரும் அங்கு வந்தனர். எனினும் தாமதமாக வந்ததற்கு எந்த வருத்த மும் தெரிவிக்கவில்லை. தாமதத்திற்கான காரணமும் கூற வில்லை. வாக்காளர் பெயர் விடுபட்டுள்ளது, தேர்தல் ஆணை யம் சரியாக வேலை செய்யவில்லை என்று, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய தேர்தல் ஆணையத் தையே வேட்பாளர் முருகானந்தம் குறை கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் கூறுகையில், பத்திரிகை யாளர் சந்திப்புக்கு அழைத்துவிட்டு வேட்பாளர் தாமதமாக வந்ததற்கு குறைந்தபட்சம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மேலும், அவர்களுக்கு வேண்டப்பட்ட பத்திரிகையாளர் களை மட்டுமே அழைக்கின்றனர். நியாயமாக கேள்வி கேட்கக் கூடிய பத்திரிகையாளர்களை அவர்கள் அழைப்பதும் இல்லை. தப்பித்தவறி எந்த நிருபராவது கேள்வி கேட்டால், அதற்கு பொறுப்பாக பதில் சொல்லாமல், நிருபரை அவம திக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் பத்தி ரிகை அலுவலகத்துக்கு அழைத்து நேரடியாக பேசி, அவர்க ளுக்கு வேண்டப்பட்ட நிருபர்களை மட்டும் அனுப்பும்படி கூறி விடுகின்றனர். மோடி தொடங்கி அண்ணாமலை வரை பாஜக வினர் அனைவரும் ஜனநாயக ரீதியாக பத்திரிகை சுதந்தி ரத்தை மதிப்பதில்லை. வேட்பாளர் முருகானந்தமும் தவறா மல் அந்த ரகம் தான் என்பதை நிரூபித்தார். அவர்கள் சொல் வதை மட்டும் கேட்டுவிட்டு, வேறு கேள்வி கேட்காமல் வெளி யிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஏற்காட்டிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஏற்காட்டிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் சேலம், ஏப்.25- கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறதென போக்குவரத்து கழக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். ஏற்காட்டில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வ ராயன் கோயில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தைத் தவிர, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். பயணிகள் சென்று வர ஏதுவாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட ஏற் காட்டிற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ ரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் ஏற்காடு செல்வோர் எண் ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப பேருந்து களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதகை நகரில் போக்குவரத்து நெரிசல்
உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் உதகை, ஏப்.25- கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. கோடைக் காலம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டிவரும் நிலையில், பொது மக்கள் குறைந்த வெப்பம் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பய ணிகள் அங்கு பூத்து குலுங்கும் மலர்களையும், இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உதகை நகரில் அவ்வப்போது கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்தும் பணி யில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘ஆப் பாயில்’
ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘ஆப் பாயில்’ சேலம், ஏப்.25- சேலத்தில் வெயிலின் தாக்கம் குறித்து ஆட்சியர் அலுவ லகம் அருகே ‘ஆப் பாயில்’ போட்ட இருவரை காவல் துறையி னர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயி லின் தாக்கம் 108 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. இந்நிலை யில், சமூக ஆர்வலரான பிரபாகரன் உள்ளிட்ட 2 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நினைவு ஸ்தூபி மதில் சுவர் மீது, வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் பார் வைக்கு முட்டையில் ‘ஆப் பாயில்’ போட்டு செய்முறையில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்கு வந்த நகர காவல் துறையி னர் அவரிடம் இதுகுறித்து அனுமதி ஏதேனும் பெற்றுள்ளீர் களா? என்று கேட்டுள்ளார் அதற்கு பிரபாகரன் முறையான பதில் கூறாதால், இவரையும் காவல் துறையினர் விசாரணைக் காக அழைத்துச் சென்றனர்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை சேலம், ஏப்.25- வெளிமாநில தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவைத் தேர்தல் கேரள மாநிலத்தில் ஏப்.26 ஆம் தேதி யும், கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக ஏப்.26 ஆம் தேதி யும், இரண்டாம் கட்டமாக மே 7 ஆம் தேதியும், ஆந்திரத் தில் மே 13 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதித்து வச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளர்க ளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். எனவே, சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் கேரளம், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் வாக்கு உரிமைபெற்ற அனைத்து வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளர்களின் ஊதியத்திலிருந்து எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது. வாக்களிக்கும் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.