மேட்டுப்பாளையம், ஏப்.27- அடிக்கடி நீருக்குள் மூழ்கும் காந்தையாறு பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள சிறு முகை லிங்காபுரம் என்னும் பகுதி யில் பாவானியாற்றின் கிளை ஆறாக காந்தையாறு ஓடுகிறது. ஆற்றின் மறுகரையில் காதந்த வயல், உளியூர், காந்தையூர், மொக்கைமேடு எனும் மலையடி வார கிராமங்கள் உள்ளன. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமங் களை சேர்ந்தவர்கள் விவசாயம், கல்வி, வேலை, மருத்துவம் என அனைத்து தேவைகளுக்கும் பரிசல் கள் மூலம் ஆற்றை கடந்து நகர பகு திக்கு வந்தாக வேண்டும். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள் ளிட்ட அனைவரும் ஆபத்தான முறையில் காட்டாற்றை கடந்து வந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இம்மக்களின் போக்கு வரத்து வசதிக்காக காந்தையாற் றின் குறுக்கே உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டது.
இதனால் இப் பகுதி மக்களின் பயணம் எளிதாக வும் பாதுக்காபானதாகவும் மாறி யது. ஆனால், பவானிசாகர் அணை யின் நீர்தேக்க பகுதியில் அமைந் துள்ள இந்த இடத்தில் காந்தையாற் றின் உயரத்தை மட்டும் கணக்கிட்டு இப்பாலம் கட்டப்பட்டது பெரும் சிக்கலை உருவாக்கியது. மழைக் காலங்களில் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட் டம் 97 அடியை எட்டினாலே இப் பாலம் நீருக்கடியில் மூழ்க துவக் கும். கடந்த 17 ஆண்டுகளில் இது வரை 10 முறை இப்பாலம் தண்ணீ ருக்குள் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் சுமார் 5 மாதங்கள் வரை பாலம் மூழ்கி கிடக்கும். அணை யின் நீர்மட்டம் குறைந்தால் மட்டுமே பாலம் வெளியில் வந்து போக்கு வரத்திற்கு பயன்படுத்த இயலும். அதுவரை மீண்டும் பரிசல் பயணத் தையே மக்கள் நம்பியிருக்க வேண் டிய நிலை உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நூறு அடியை எட்டி மூழ்கிய பாலம் தற்போது முழுமையாக வெளி வந் துள்ளது. மீண்டும் பாலத்தின் மீது போக்குவரத்து துவங்கியுள்ள போதிலும், அடுத்த மழை காலத் திற்கு முன்பாக இப்பாலத்தை உயர்த்தி கட்டி, மீண்டும் நீருக்குள் மூழ்காமல் பாதுகாத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.