districts

img

வாழ்வாதாரத்தை பாதிக்கும் பொது ஏல முறை

ஈரோடு, டிச. 8- வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பொது ஏல முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி அந்தியூர்  அரசு மருத்துவமனை அருகே புத னன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ள நீர் நிலைகளில் உள்ள  மீன் பாசி உரிமத்திற்காக பொது ஏலம் விட நடவடிக்கைகள் மேற்கொள்ள சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, கூட்டுறவு சங்கங் கள் ஒன்றிணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்றது. இந்நி லையில், 10 பேர் கொண்ட குழு ஒன்று பொது ஏல நடவடிக்கைக்காக  மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. இதனை எதிர்த்தும், மாவட்ட ஆட்சி யரின் தலைமையின் கீழ் அமைக் கப்பட்ட குழுவே சட்டவிரோதமா னது. அக்குழுவின் செயல்பாடுக ளும் முழுக்க முழுக்க சட்ட விரோ தமானது மற்றும் நீதிமன்றத்தை அவமதிப்பதுமாகவும் உள்ளது என குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், நீதிமன்றத் தீர்ப்பை முறை யாக செயல்படுத்தி சட்டம், ஒழுங்கு சூழலை பாதுகாக்க வேண்டும். உட னடியாக ஏல ரத்து அறிவிப்பை வெளி யிட வேண்டும் என வலியுறுத்தி பி. மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அய்யம்பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை ெற்றது. அந்தியூர் பெஸ்தவர் மீன வர் கூட்டுறவு சங்க தலைவர் நட ராஜ், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலக்குழு உறுப்பி னர் லோ.சேகர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிஐடியு பொது தொழிலாளர் சங்க தலைவர் ஏ.கே.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஆர்.முருகேசன் ஆகியோர் ஆர்ப் பாட்டத்தில் உரையாற்றினர். பி. மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் பிரகாசம், வடிவேல் மற் றும் அந்தியூர் கூட்டுறவு சங்க தலை வர் விஸ்வநாதன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றனர்.