districts

img

கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க துடிக்கிறார்கள்!

கோவை, ஜன.28- பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடை யச் செய்து அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க துடிக்கி றார்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு உரையாற்றினார். கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் விரிவ டைந்த மாவட்ட செயற்குழு மற்றும் பிஎஸ் என்எல் யின் பொருளாதார மீட்சிக்கு வழி காணும் கருத்தரங்கம் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஜெ.பிரின்ஸ் வரவேற் றார். இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.செல்லப்பா, மாநிலத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி குடியரசு ஆகியோர் கருத்துரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்  செயலாளர் பி.அபிமன்யு சிறப்புரையாற்றி னார். அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின்  வீழ்ச்சிக்கு மோடி அரசின் தவறான கொள்கை மற்றும் நிர்வாக திறமையின்மைதான் கார ணம். பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடை யச் செய்து அதானி, அம்பானி போன்ற  கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க துடிக் கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இரண் டாவது விஆர்எஸ் திட்டத்தை கொண்டு வந்த போது அதனை ரத்து செய்ய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பெரும் பங்காற்றியது. பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், விஆர்எஸ் திட்டத் திற்கு ஒருபோதும் அனுமதிக்காது. சில மாதங் களுக்கு முன்னர் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டணத்தை 25% உயர்த்தி யது அந்த சமயத்தில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி  வந்தார்கள். ஆனால் அப்படி வந்த வாடிக்கை யாளர்களுக்கு தரமான சேவையை வழங்க முடியவில்லை. ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக பிஎஸ்என்எல் நிறுவ னத்தை முடக்குவதிலேயே குறியாக உள் ளது, என்றார். முடிவில். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஒய்.அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.