districts

img

பணி நீட்டிப்பு, ஊதிய நிலுவையை வழங்கிடுக தற்காலிக செவிலியர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

கோவை, மார்ச் 31- பணி நீட்டிப்பு செய்ய கோரியும், சம்பள பாக்கியை பெற்று தர வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதன்பின் அவர்கள் செய்தியா ளர்களிடம் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் தற்காலிக பணிக்காக பணிய மர்த்தப்பட்டனர். இதன்பின் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக் கும் பணிகளும் தங்களுக்கு அளிக்கப்பட் டது. ஆனால், எங்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் தரப்படவில்லை.  இதற்கிடையே, தற்போது தங்களின் பணி காலம் முடிந்ததால், பணியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கூறி வரு கின்றனர். ஆனால், தங்களுக்கு வழங்கப் பட வேண்டிய சம்பள பாக்கியை தராமல் எவ்வாறு வெளியேறுவது? பணியில் இருக்கும் போது சம்பளம் தராத அதிகாரி கள்,  நாங்கள் வெளியே சென்ற பிறகு  எப்படி சம்பளம் வழங்குவார்கள்? என்ற னர். எனவே, தங்களுக்கு சம்பள பாக்கியை பெற்று தருமாறும், முதல்வர் இதில் கவனம் செலுத்தி, தங்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.