districts

மக்களிடம் பணப்புழக்கமே பொருளாதாரத்தைக் காப்பாற்றும் கொரோனா நெருக்கடி தீர நபருக்கு மாதம் ரூ.1000 வழங்குக!

புதுதில்லி, மே 25- கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமா ளிக்க, உலகளாவிய அடிப்படை வருமானம் என்ற அடிப்படையில் ஒரு நபருக்கு மாதம் ரூ.1,000 வீதம் மத்திய அரசு, உடனடியாக வழங்க துவங்க வேண்டுமென நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டப்லோ யோசனை தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூர் இலக்கிய விழா வில் ஆன்லைன் மூலம் இருவரும் உரையாடினர். அப்போது பேசிய அபிஜித் பானர்ஜி கூறியதா வது: கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில், பெருமள வில் உற்பத்தி செய்வதற்கு இந் தியா உதவக்கூடும். ஆனால் தடுப் பூசி இல்லாத நிலையில் இந்தியா வில் கொரோனா பாதிப்பு அதிக ரித்து வருகிறது.

இதனால் ஊர டங்கு நீட்டிப்பு இருக்கும். தடுப் பூசி உற்பத்தியாளராக இந்தியா வின் வலிமை மேலும் அதிகரிக் கும். ஆனால் வினியோகம், நிதி மற்றும் அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண் டும்.  ஒரு நபருக்கு ஒவ்வொரு மாத மும் ரூ.1,000 என்பது அவர்களி டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அதிகம் என்றா லும், ஒருவருக்கு 500 வீதம் ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ரூ.2,500 கிடைக்கும். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா மிகப்பெரிய அதிர்ச்சி யை எதிர்கொள்ளப் போகிறது. மக்களின் கையில் பணம் புழக்கம் இருப்பது பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழியாக இருக்கலாம்.  

ஏற்கனவே ஜன் தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் எண் இணைப்பு இருப்பதால் உடனடி யாக யு.பி.ஐ (Ultra base income) செலுத்துவதை துவங்க வேண்டுமென பொருளா தார நிபுணரான எஸ்தர் டப்லோ தெரிவித்துள்ளார். மேலும், அர சின் நிவாரணம் அல்லது உதவி தகுதியற்றவர்களுக்கு செல்லக் கூடாது என்ற மத்திய அரசின் எண்ணம் மாற வேண்டும். கொரோனா சூழ்நிலை மக் களை வறுமையின் பிடியில் தள்ளக்கூடும் என்பதால் யு.பி.ஐ உதவுமென்றும், அரசு யு.பி.ஐ. யை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மட்டும் பயன் படுத்தாமல், நெருக்கடி முடிந்தா லும் தேவைப்படுவோருக்கு சமூக பாதுகாப்பு திட்டமாக தொட ரலாமென தெரிவித்துள்ளார்.