districts

img

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்குக

ஈரோடு, டிச. 8- நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்  தொடர்ந்து வேலை வழங்கக்  கோரி ஜம்பை பேரூராட்சி யில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம்,  ஜம்பை பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு  திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அரசு வழங்கிய இலவச வீட்டு மனை, வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் மீண்டும் வழங்க வேண்டும். துருசாம்பாளையம் பகுதி மக்களுக்கு பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். குடியிருப்பு மீது விழுந்துள்ள மதில் சுவற்றை அகற்ற வேண்டும். மயா னத்திற்கு செல்லும் வழியை தனி சாலையாக  மாற்றி கொடுக்க வேண்டும். ஊருக்கு செல்லும் ஓடை தரைப்பாலத்தை உயர் மட்ட  பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க துருசாம்பாளையம் கிளையின்  சார்பில் அளிக்கப்பட்டது.  இதில், கிளை தலைவர் ஆர்.நல்லசாமி, செயலாளர் சம்பத், பொருளாளர் செந்தில் ஆகியோர் செயல் அலுவலரிடம் அளித்த னர். தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், தாலுகா கமிட்டி உறுப்பினர் வீரன், சின்னியம் பாளையம் கிளை தலைவர் சுப்பிரமணியன், வேலாமரத்தூர் கிளை தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;