கோவை, டிச. 15– அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை கழக நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு செவ்வாயன்று போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங் கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், மாநிலத் தலை வர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் செல்வராஜ், நிர்வா கிகள் சேதுராமன், ஈரோடு ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.