தருமபுரி, ஜூன் 27- தருமபுரி செங்கொடிபுரத்தில் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண் டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகரக் குழு மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி நகரக்குழு 2 ஆவது மாநாடு தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் கே.ரங்கநாயகி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.ஜெயா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நகரசெயலாளர் எஸ்.நிர்மலா ராணி வேலை அறிக்கையை முன்வைத்தார். பொருளா ளர் ஒய்.சுபா வரவுசெலவு கணக்கினை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி நிறைவுறையாற்றி னார். இதில், பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும். நுண்நிதி கடன் சுமையில் இருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நகர்புறத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். தருமபுரி செங்கொடிபுரத்தில் நீண்ட ஆண்டுகாலமாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். இதில், நகர தலைவராக ஒய்.சுபா, நகரசெயலாளராக எஸ்.நிர்மலாராணி, பொருளாளராக சிவசங்கரி உள்ளிட்ட 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.