திருச்செங்கோடு, அக்.5- திருச்செங்கோடு, கொத்தம் பாளையத்தில் கடந்த இரண்டு மாத மாக குடிநீர் முறையாக விநி யோகம் செய்யாதை கண்டித்து சிபிஎம் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஓரிரு நாட்களில் குடி நீர் விநியோகத்தை முறைப்படுத்தி தருவதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம், அகரம் கிராமத் திற்குட்பட்டது கொத்தம் பாளையம். இங்கு சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியின் அருகில் திருமணிமுத்தாறு மேம் பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று வருடங்களாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில், பாலம் பணிகளால் குடிநீர் குழாய் கள் உடைவது தொடர்கதை யாக உள்ளது. இதனால் இப்பகுதி யில் வரக்கூடிய காவிரி குடிநீர் குழாய்கள் உடைந்து கொண்டே உள்ளது. குடிநீர் பல மாதங்களாக சரி யாக விநியோகம் செய்யப்படுவ தில்லை.
இதனால் மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய தோட்டங்களில் சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்துகின்றனர். உரிய நேரத்தில் வெளியூர் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் குடிநீர் பிடிப்பதற்காக பல மணி நேரம் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் அதி காரிகள் மற்றும் அரசு நிர்வாகத் திடம் பொதுமக்கள் பல முறை யிட்டு எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனால் ஆவேச மடைந்த பொதுமக்கள், மார்க் சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான சு. சுரேஷ் தலைமையில் கொத்தம் பாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இத்தகவலறிந்து சம்பவ இடத் திற்கு காவல் சிறப்பு உதவி ஆய் வாளர் செ.கோபால், ஊராட்சி மன்ற தலைவர் எல்.லதா, கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் ஓரிரு நாட்களில் குழாய் உடைப்பை சரி செய்து குடி நீர் பிரச்சனை தீர்ப்பதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அனைவரும் கலைந்து சென்றனர்.