தொழிலாளர் ஆணையரிடம் முறையீடு ஈரோடு, ஜூலை 5- ஓய்வுகால பயன்களுக்கு தீர்வு காணக் கோரி தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முறையிட்டனர். கம்பெனிகள் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டு தோறும் சுமார் 400 தொழிலாளர்கள் பணி முதிர்வு ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வில் செல்கின்றனர். சட்டப்படியான ஓய்வுகால பயன்களான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி மற்றும் விடுப்பு சம்பளம் வழங் கப்படவில்லை. பண பலன்கைளை தாம தமின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமேன ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன்ஸ் ரிடையர்டு எம்ப்ளாயீஸ் வெல்பேர் அசோசியேசன் தலைவர் பி.ஜெக நாதன், செயலாளர் எஸ்.ஜெயராமன், பொரு ளாளர் ஆர்.நாச்சிமுத்து மற்றும் என்.முரு கையா ஆகியோர் தொழிலாளர் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.