வாலிபர் சங்கம் ஆப்பாட்டம் கோவை, செப். 14- அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடக்கோரி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் அரசு மருத்துவ மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற் றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சிகிச்கை களுக்கு ஆனைமலை தாலுகா, கோட்டூர் பகு தியில் உள்ள அரசு மருத்துவமனையை நம் பியே உள்ளனர். இம்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதுமான வசதிகள் இல்லை. ஆகவே, இம்மருத்துமனையில் அடிப்படை வசதிகளை உருவாக்கிட வேண்டும். மருத்து வர்கள், செவிலியர்கள் காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்பிட வேண்டும். எக்ஸ்ரே, ஸ்கேன் வசதிகளை உடனடி யாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஆனைமலை தாலுக்கா, கோட்டூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்கத்தின் ஆனைமலை தாலுக்காச் செயலாளர் எம். சுரேஷ்குமார் தலைமை ஏற்றார். இதில், வாலிபர் சங்க மாவட்டப் பொரு ளாளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கோபி, செய லாளர் சந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுக்காச் செய லாளர் வி.எஸ்.பரமசிவம், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் ஆனைமலை தாலுக்காச் செயலாளர் ஆர். தங்கவேல் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.