திருப்பூர், ஜூலை 26 - மணிப்பூர் கலவரத்தைத் தூண்டி அப்பாவி மக்கள் உயிர்ப்பலிக்கு காரணமான பாஜகவின் நாசகர அரசியலைக் கண்டித்தும், அந்த மாநிலத் தில் அமைதியை நிலைநாட்ட உடனடியாக நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன.
திருப்பூர் வடக்கு மாநகரம்
எம்.எஸ்.நகரில் திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.நந்தகோபால் தலைமை ஏற்றார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, மாண வர் சங்க மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கர வர்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்தும், மணிப் பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் உரையாற்றினர்.மாநகரச் செயலா ளர் பி.ஆர்.கணேசன், மாநகரக்குழு உறுப்பி னர்கள், கிளைச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவிநாசி சாலை பேருந்து நிறுத்தத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் பா.ராஜேஷ் தலைமை ஏற்றார். இதில் கட்சியின் மாநகரச் செய லாளர் பி.ஆர்.கணேசன், மாநகரக்குழு உறுப் பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றி னர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். மைதிலி, வை.ஆனந்தன் உள்பட மாநகரக்குழு மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி அணியி னர் பெருந்திரளானோர் கலந்து கொண்டு பாஜக வுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.
குடிமங்கலம்
மணிப்பூர் குக்கி ஜோ பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கியதை கண்டித்து குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக அண் மையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர் ஆர்.ஓம்பிரகாஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத் தின் மாவட்ட நிர்வாகி சி.ஜெயப்பிரகாசம் ஆகி யோர் பாஜக அரசைக் கண்டித்துப் பேசினர். கமிட்டி உறுப்பினர் எஸ். மோகனசுந்தரம் நன்றி கூறினார்.
தெற்கு ஒன்றியம்
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசைக் கண்டித்து சிஐடியு, வாலிபர், மாதர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பனியன் சங்கத் துணைச்செயலாளர் செல்வன் தலைமை ஏற் றார். ஜனநாயக மாதர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.ஜானகி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன் றியப் பொருளாளர் கே.மணி, பனியன் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.சம்பத் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தொழிலார் கள், மாதர், வாலிபர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நல்லூரில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு கட்சி உறுப்பினர் திருப்பதி தலைமை ஏற்றார். இதில் தெற்கு ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி, பொதுத்தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியம், துரைசாமி மற் றும் சாம்பசிவம் ஆகியோர் உரையாற்றினர். இதில் கமிட்டி உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியம், குணசேகரன் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றிய மாதர் வாலிபர் சங்கம் சார் பில் கருப்பகவுண்டம்பாளையத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் பா.லட் சுமி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 45 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட மொத் தம் 70 பேர் கலந்து கொண்டனர்.
வேலம்பாளையம்
15.வேலம்பாளையம் கலையரங்கம் அரு கில், மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கொண்டி ருக்கும் கொடூரங்களை தடுக்காமல்,வேடிக்கை பார்க்கும் மாநில பாஜக அரசு பதவிவிலக வேண் டும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. வேலம்பாளையம் பி கிளைச் செயலாளர்வி.ஆர்.சரவணக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், மூத்த தோழர் வி.பி. சுப்பிரமணியம், நகரக் குழு உறுப்பினர் த.நாக ராஜன், மாணவர் சங்கம் நிர்வாகி வே.பொன் னம்மாள் ஆகியோர் உரையாற்றினர். வேலம் பாளையம் மாதர் (பி) கிளைச் செயலாளர் சி. வசந்தி நன்றி கூறினார்.
வடக்கு ஒன்றியம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பாண்டிய நகர் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒன்றியக்குழு உறுப்பினர் என்.இளங்கோ தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.பானுமதி ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.