districts

img

நீல நிற அட்டை கேட்டு ஆக.8ல் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

நாமக்கல், ஜூலை 16- நீல நிற அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆக.8 ஆம் தேதியன்று மோகனூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மோகனூர் தாலுகாக் குழு அமைப்பு மாநாடு கீராயூர் தனியார் மண் டபத்தில் நடைபெற்றது. மாநாட்டு கொடி யினை சி.பெருமாள் ஏற்றி வைத்தார். மாநாட் டிற்கு எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித் தார். சேவியர் வரவேற்றார். சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், மாநாட்டினை துவக்கி வைத்து எதிர்கால கட மைகள் குறித்து உரையாற்றினார். அகில இந் திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் மாநாட்டை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் முழுமை யாக வேலை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அடையாள அட்டை  வழங்க, தாலுகா அளவில் முகாம் நடத்தி அனைவரையும் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், பேட்டரி வண்டி களுக்கும் குறைந்த விலையில் உதிரி பாகங் கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். மோகனூர் வட்டாரத்தில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் முறையாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று மோகனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து சங்கத்தின் மோகனூர்  தாலுகா தலைவராக எஸ்.மாதேஸ்வரன், செயலாளராக சி.பெருமாள், பொருளாள ராக மகேஸ்வரன், உதவித்தலைவர்களாக தேவக்குமார், கல்யாணி, உதவிச்செயலா ளர்களாக ஆரோக்கிய லாரன்ஸ், பாப்பாத்தி  உட்பட 14 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலச் செயலாளர் பி. ராஜேஷ் மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினார். சுரேஷ் நன்றி கூறினார்.