தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற தலைவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு, தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கை வியாழனன்று விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர் சங்க தலைவர்கள் மீது தொடரப்பட்டது பொய்வழக்கு எனக்கூறி விடுவித்தார்.