districts

img

செவிலியர்கள் போராட்டம் தீவிரம் - கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்

சேலம், ஜன.3- தற்காலிக செவிலியர்களுக்கு தொகுப்பூதியத்தில் பணி வழங்க வேண் டும் என்கிற கோரிக்கையோடு மூன்றா வது நாளாக செவ்வாயன்று கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடு பட்டனர். கொரோனா காலத்தில் தங்கள் உயி ரையும் பொருபடுத்தாமல் பணியாற்றி யமைக்கு தங்களை தொகுப்பூதியத் தில் பணியமர்த்த வேண்டும் என  கோரிக்கை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, போராட்டத்தை வாழ்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, தலைவர் ஜெகநாதன், பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர்  உரையாற்றினர். செவிலியர்களின் மூன் றாவது நாள் தொடர் போராட்டத்தை யடுத்து காவல் துறையினர் பாது காப்பை பலப்படுத்தியுள்ளனர்.