districts

img

15வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்குக

சேலம், டிச. 4- பதினைந்தாவது ஊதிய பேச்சு  வார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி போக்குவரத்து சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து பணிமனைகள் முன்பும்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் பணியாற் றும் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கூட்டமைப்பு சார்பில் தமி ழக முழுவதும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாச தொகையினை வழங்க வேண் டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் 98 மாத டிஏ உயர்வு ஒப்பந்த உயர் வுகள் பண பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும். புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய்து  பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

15 வது  ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, அனைத்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும்  துண்டறிக்கை விநியோகிக்கும் இயக்கங்களில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, சேலம் அஸ்தம்பட்டி அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு  விரைவு போக்குவரத்து தொழிற் சங்க மாநில உதவித் தலைவர் செல் லப்பன் தலைமையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில், சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், அரசு விரைவு போக்குவரத்து முன்னாள் நிர்வாக  இயக்குனர் எம்.எஸ்.செல்லப் பாண்டி, பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பத்மநாபன், சிஐடியு  விரைவு போக்குவரத்து தொழிற் சங்க மாநில துணைப் பொதுச் செய லாளர் என்.முருகேசன், ஓய்வு  பெற்ற தொழிற்சங்க நிர்வாகி டி.மணிமுடி, சிஐடியு போக்கு வரத்து தொழிற்சங்க மண்டலப்  பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தலைவர் செம்பன், பொரு ளாளர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கே ற்றனர். இதேபோன்று, சேலம் மாவட் டத்தில் மட்டும் மெய்யனூர், எரும பாளையம், போக்குவரத்து தலைமை அலுவலகம், ஆத்தூர்,  எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், நாமக் கல், திருச்செங்கோடு ஆகிய சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பணிமனைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

கோவை

கோவை மாவட்டத்தில், சுங் கம், 1, 2 பணிமனைகள், உக் கடம் பணிமனை, பொள்ளாச்சி உள் ளிட்ட பல்வேறு இடங்களில், சங்கமம் நிகழ்வு நடைபெற்றது. இதில், சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் கோவை மண்டல தலைவர் வேளாங்கன்னிராஜ், பொதுச்செ யலாளர் மா.பரமசிவம், போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற பெற் றோர் நல அமைப்பு நிர்வாகி சேது ராமன், ஏஐடியுசி சங்கத்தின் ராஜேந் திரன், எச்எம்எஸ் சங்கத்தின் உமா  மகேஸ்வரன், அலுவலர்  சங்கத் தின் மோகனசுந்தரம் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். 

தருமபுரி

ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன் அகவிலைப்படி உயர்வு  வழங்ககோரி அரசு போக்குவ ரத்து வரத்து கழக ஓய்வூதியர் கூட்ட மைப்பு சார்பில் தருமபுரி அரசு  போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிர்ச்சார கூட்டத்திற்கு கூட்ட மைப்பு தலைவர் செங்கூட்டுவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.முனுசாமி, நிர்வா கிகள் முருகன், சதாசிவம், பிராண் சிஸ், காளியப்பன், சையத்மசூரு தின் ஆகியோர் பங்கேற்று பேசி னர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபிசெட் டிபாளையம் பேருந்து நிலை யத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், 19 ஆம்  தேதி வேலை நிறுத்த ஆயத்த பிரச் சாரம் குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு  பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அரசு போக்குவரத்து தொழிலா ளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  இதில், சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைப் பொதுச்செயலா ளர் பாலகிருஷ்ணன், கோபி செய லாளர் துரைராஜ், தலைவர் கருப்பு சாமி, பொருளாளர் வெள்ளியங்கிரி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் இதேபோன்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  அரசு போக்குவரத்து பணிமனை கள் முன்பும், கோரிக்கை வலி யுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் இயக்கம் நடை பெற்றது. இதில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அரசு போக்கு வரத்து ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.