districts

img

ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

சேலம், ஜன.31- ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, ஒருவர் உயர்மின் கோபுரத் தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், இடங்கணசாலை நகராட்சி, 9  ஆவது வார்டுக்குட்பட்ட சின்ன ஏரி யில் ரூ.8 கோடியே 8 லட்சம் மதிப்பீட் டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்க, கடந்த ஆறு மாதங்க ளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப் பட்டது. இதற்கு பொதுமக்கள், சமூக  ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப் பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். கடந்த செப்.1 ஆம் தேதி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க மாற்று இடம் தேர்வு  செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து செப்.7 ஆம் தேதி சின்ன ஏரி சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற் பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக் கான கையெழுத்துக்களை பெற்று  மனு அளித்தனர். இதன்பின் நகராட்சி ஆணையாளர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட பெரும்பாலா னோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்தனர். இந்நிலையில், புதனன்று ஏரியில் அதற்கான பணிகள் துவங்கி யது. இதனையறிந்த 9 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் அவர்களிடம் நகராட்சி ஆணையா ளர் சேம்கிங்ஸ்டன் (பொ) சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலை யம் அமைக்கும் இடத்தின் அருகே  இருந்த உயர் மின்னழுத்த கோபுரத் தில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடு பட்டார். அப்போது, அவர் சம்பவ  இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில்  வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என திட்ட வட்டமாக தெரிவித்தார். இதனைய டுத்து அங்கு பணி தற்போது நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. மேலும், தகவ லறிந்து வந்த சங்ககிரி தீயணைப்புப் துறையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு  மேலாக மின் கம்பத்தில் போராட்டத் தில் ஈடுபட்ட அருளை பத்திரமாக மீட்டனர். மேலும், சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில், மகுடஞ்சாவடி ஆய் வாளர் தங்கவேல் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.