districts

img

தாராபுரத்தில் கடைகளை காலி செய்ய எதிர்ப்பு: கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்

திருப்பூர், பிப்.6- தாராபுரம் பேருந்து நிலையத்தில்  கடைகளை காலி செய்ய எதிர்ப்பு  தெரிவித்து வியாபாரிகள் கடை களை காலி செய்ய எதிர்ப்பு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் மத்திய பேருந்து நிலை யம் 1983 ஆண்டு திறக்கப்பட்டது. இதில், மொத்தம் 110 கடைகள் வாட கைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலை யில் பேருந்து நிலையத்தில் பொலி வுறு நகரம் திட்டத்தின் கீழ் 53 கடை களை இடித்துவிட்டு புதிதாக கட்டடம்  கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள் ளது. இதற்காக கடைகளை காலி செய்யும்படி ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைக் கண்டித்து கடை உரிமை யாளர்கள் திங்கட்கிழமை கடை களை அடைத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கி ருந்து நகராட்சி அலுவலகத்துக்கு ஊா்வலமாகச் சென்று நகர்மன்றத் தலைவர் கு.பாப்பு கண்ணனிடம் மனு  அளித்தனர். இதில், கடைகளைக் காலிசெய்ய கால அவகாசம் வழங்க  வேண்டும். மேலும், புதிதாக கடை கள் கட்டியவுடன் தங்களுக்கே மீண் டும் வாடகைக்கு விட வேண்டும் என் றும் கோரிக்கை வைத்தனர். அப்போது நகர்மன்றத் தலைவர், நகராட்சிக்கான வருவாய் மிகவும் பற்றாக்குறையான நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர்களிடம் பேசி ஒப்புதல் பெற்று, பேருந்து நிலையத்தில் 65  புதிய கடைகளை கட்ட ரூ.5.50 கோடி  நிதி பெறப்பட்டுள்ளது. மேலும் 40 வரு டங்களுக்கு மேல் அங்குள்ள கட்டி டங்கள் பழமை ஆகிவிட்டதால், நக ராட்சி விதிமுறைகளின் படி அபாய  நிலையில் உள்ள அந்த கட்டிடங் களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய  கட்டிடம் கட்டுவது தான் நியாயமா னது. புதிய கடைகள் கட்டி முடிக் கும் வரை பேருந்து நிலைய வளாகத் திற்குள்ளேயே தற்காலிக கடைகள் அமைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடை நடத்தி வருபவர்களின் கோரிக்கையின் படி  புதிதாக கட்டப்படும் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து ஒப்பந்தப் புள்ளி விடப்படும். இதில் யார் அதிகம்  வாடகை தருவதாக ஒப்புதல் கூறுகி றார்களோ அவர்களுக்கு கடைகளை  வழங்க இருக்கிறோம். இதில் ஏற்க னவே கடை வைத்திருப்பவர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்  உள்ளவர்களுக்கு நாங்கள் முன்னு ரிமை சலுகை சட்டப்படி வழங்க இய லாது. எனவே நகராட்சி மத்திய  பேருந்து நிலையத்தில் கடை வைத்து  தொழில் செய்யும் அனைவரும் நக ராட்சியின் நடவடிக்கைக்கு முழு ஒத் துழைப்பு வழங்க வேண்டும் என் றார். இப்பேச்சுவார்த்தையின் போது நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் மேலாளர் முருகதாஸ் மற் றும் நகராட்சி ஊழியர்கள் கவுன்சி லர்கள் உடன் இருந்தனர்.